ஆப்நகரம்

முஷாரப் மீதான தூக்கு தண்டனை ரத்து..! லாகூர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு...

தேசத்துரோக வழக்கில் குற்றவாளியாக கருத்தபட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் தூக்கு தண்டனை ரத்து செய்துள்ளது நீதிமன்றம்.

Samayam Tamil 13 Jan 2020, 6:36 pm
பர்வேஸ் முஷாரப் அதிபராக இருந்த காலத்தில், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, 2007ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்தார். இதை எதிர்த்து அவர் மீது 2013ஆம் ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடரப்பட்டது.
Samayam Tamil முஷாரப் மீதான தூக்கு தண்டனை ரத்து


இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கையில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முஷாராப் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக எனக் கூறி, வெளிநாடு பாகிஸ்தானிலிருந்து வெளியேறி துபாய் சென்றுவிட்டார்.

மருத்துவமனையில் இருந்தபடி வாக்குமூலம் கொடுக்கிறேன்: முஷாரப் கெஞ்சல்

பின்னர் அங்கேயே அவர் தங்கிவிட்டார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி தேசத்துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்தது. அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட மறு சீராய்வு மனுவை விசாரித்த லாகூர் லாகூர் நீதிமன்றம் பர்வேஸ் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி