ஆப்நகரம்

லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு: பலி எண்ணிக்கை 58 ஆனது

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது.

TNN 3 Oct 2017, 1:50 am
லாஸ் வேகாஸ்: அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil las vegas shooting death toll rises to 58
லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு: பலி எண்ணிக்கை 58 ஆனது


அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் ’மேண்டலே பே’ என்ற ஹோட்டல் அருகே இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் ஹோட்டலின் 32வது மாடியிலிருந்து கூட்டத்தை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து பொதுமக்கள் அலறியபடி அங்கிருந்து ஓடினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது. மேலும், இத்தாக்குதலில் 400க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஸ்டீபன் பெட்டாக் என்ற நபர் போலீஸ் வருவதற்கு முன்பாகவே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் 8 துப்பாக்கிகள் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்புப் பொறுப்பெற்றுள்ளது. மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட நபர் சில மாதங்களுக்கு முன்பே இஸ்லாம் மதத்திற்குக் மாறியதும் தெரியவந்துள்ளது.

இத்தாக்குதலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் இந்திய தூதரகம் நிலைமையை கண்காணித்து வருகிறது என்றும் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி