ஆப்நகரம்

19ஆம் நூற்றாண்டின் கடைசி மனிதர் காலமானார்

19ஆம் நூற்றாண்டின் கடைசி மனிதர், 117 வயதில் நேற்று காலமானார்.

TNN 16 Apr 2017, 9:33 am
ரோம்: 19ஆம் நூற்றாண்டின் கடைசி மனிதர், 117 வயதில் நேற்று காலமானார்.
Samayam Tamil last known survivor of 19th century dies at 117
19ஆம் நூற்றாண்டின் கடைசி மனிதர் காலமானார்


இத்தாலி நாட்டின் ரோம் நகரில் வசித்து வந்த எம்மா மொரனோ, உலகின் மிக மூத்த மனிதர் மற்றும் மூத்த பெண்மணி. அவர் கடந்த 1899ஆம் ஆண்டு, நவம்பர் 29ஆம் தேதி மொரனோ பிறந்தார். இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள வெர்பானியாவில் வளர்ந்துள்ளார். 19ஆம் நூற்றாண்டின் கடைசி மனிதர் என்று அழைக்கப்படும் மொரனோ, நேற்று உயிரிழந்தார். அவருடைய இறப்பிற்கு வெர்பானிய மேயர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மொரனோ மிகச்சிறந்த வாழ்வை வாழ்ந்து காட்டியுள்ளார். அவருடைய மன தைரியத்தை நாம் என்றும் நினைவு கூற வேண்டும். அது நமது வாழ்விற்கு நம்பிக்கையாக அமையும் என்று கூறியுள்ளார். இரண்டு உலகப் போர்களின் போதும் வாழ்ந்த அவர், அதுகுறித்து நன்கு விவரம் அறிந்தவர். மேலும் ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Emma Morano, an Italian woman believed to have been the oldest person alive and the last survivor of the 19th century, died today at the age of 117, the Italian media reported.

அடுத்த செய்தி