ஆப்நகரம்

மோசடி வழக்கில் சிக்கிய டொனால்ட் ட்ரம்ப்.. நீதிமன்ற உத்தரவால் தலைமேல் கத்தி!

சொத்து கணக்கை தவறாக காட்டிய வழக்கில் டொனால்ட் ட்ரம்பை நெருக்கும் நீதிமன்றம். நெருக்கடியில் ட்ரம்ப் தரப்பு.

Samayam Tamil 30 Jan 2021, 4:38 pm
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். இதையடுத்து, ஜனவரி 20ஆம் தேதியன்று அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டார். கடந்த ஆட்சியில் ட்ரம்ப் மேற்கொண்ட பல நடவடிக்கைகளை பைடன் தற்போது ரத்து செய்து வருகிறார்.
Samayam Tamil Trump


இந்நிலையில், மோசடி வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு ஒழுங்காக ஒத்துழைக்கும்படி டொனால்ட் ட்ரம்புக்கு நியூ யார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், ட்ரம்ப் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது.

மகளின் பெட் ரூமில் அதிர்ச்சி.. அரண்டுபோன தாய்.. அடுத்து நடந்த காமெடி!
வங்கிக் கடன்கள் மற்றும் வரி சலுகைகள் பெறுவதற்காக டொனால்ட் ட்ரம்ப் தனது சொத்து விவரங்களை தவறாக கணக்கு காட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு மான்ஹாட்டனில் உள்ள மாகாண உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

ட்ரம்பின் சொத்துகள் தொடர்பான ஆவணங்களை அவரது வழக்கறிஞர்கள் நீண்ட நாட்களாக மறைக்க முயற்சித்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் ஒரு படி மேலே போய், ட்ரம்பின் வழக்கறிஞர்களுடனான தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட ஆவணங்களையும் சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், உண்மை வெளியே வரும் என நம்பப்படுகிறது. நீதிமன்றத்தின் அடுக்கடுக்கான உத்தரவுகளால் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார்.

ஆணும் ஆணும் உறவு.. போலீஸ் செஞ்ச வேலையை பாருங்க!
டொனால்ட் ட்ரம்ப் வங்கிக் கடன் வாங்குவதற்காகவும், வரி சலுகை பெறுவதற்காகவும் சொத்து மதிப்பை தவறாக காட்டியதாக 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் குற்றம்சாட்டப்பட்டது. அப்போது முதல் விசாரணை தொடங்கிவிட்டது. எனினும், கடந்த டிசம்பர் மாதம் முதல் வழக்கு சூடுபிடித்துள்ளது.

அடுத்த செய்தி