ஆப்நகரம்

கடல் வழியாக ஆஸ்திரேலியாவிற்குள் செல்ல முயற்சிக்கும் அகதிகளுக்கு வாழ்நாள் தடை

கடல் வழியாக ஆஸ்திரேலியாவிற்குள் செல்ல முயற்சிக்கும் அகதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் வகையில் அந்நாட்டு அரசு புதிய சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளது.

TNN 31 Oct 2016, 11:41 am
மெல்பெர்ன்: கடல் வழியாக ஆஸ்திரேலியாவிற்குள் செல்ல முயற்சிக்கும் அகதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் வகையில் அந்நாட்டு அரசு புதிய சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil lifetime ban for refugees try to reach australia through sea
கடல் வழியாக ஆஸ்திரேலியாவிற்குள் செல்ல முயற்சிக்கும் அகதிகளுக்கு வாழ்நாள் தடை


இலங்கை, சிரியா, ஈராக், மியான்மர், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து போர் சூழல் காரணமாக கடல் வழியாக ஆஸ்திரேலியாவில் அகதிகள் தஞ்சம் புகுவதுண்டு. சமீப காலமாக ஆஸ்திரேலிய அரசு கடுமையான கடல்வழி கட்டுப்பாடுகளை தஞ்சம் கோரி வருபவர்களுக்கு விதித்து வருகிறது.

இந்நிலையில் அகதிகளின் வருகையை முழுமையாக தவிர்க்கும் விதமாக, கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் செல்ல முயற்சிக்கும் அகதிகளுக்கு அந்நாட்டில் நுழைய வாழ்நாள் தடை விதிக்கும் புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இவர்கள் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டாலும், எதிர்காலத்தில் சுற்றுலா விசாவை கூட ஆஸ்திரேலியாவில் பெற முடியாது. இதில் குழந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இத்தடை 2013ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுக்குள் கடல் வழியாக வர முயற்சித்தவர்களுக்கு பொருந்தும். இந்த சட்டத்திற்கு ஆஸ்திரேலியாவில் மட்டுமின்றி சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் மட்டத்திலும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

Lifetime ban for refugees try to reach australia through sea.

அடுத்த செய்தி