ஆப்நகரம்

லண்டன் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக 12 பேர் கைது

லண்டனில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக, இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TNN 4 Jun 2017, 10:14 pm
லண்டனில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக, இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil london attack 12 arrested in barking after van and knife attack
லண்டன் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக 12 பேர் கைது


லண்டன் பாலம் மற்றும் போராவ் மார்க்கெட் பகுதியில் நேற்றிரவு வந்த தீவிரவாதிகள் சிலர், கத்தியால் பொதுமக்களை சராமரியாக குத்திவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவத்தில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னும் 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, லண்டன் போலீசார் இதுவரை 12 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் தீவிரவாதிகளில், 3 பேரை போலீசார் அப்போதே சுட்டுக் கொன்றுவிட்டனர்.

தீவிரவாதிகளுக்கு உதவியதாகக் கூறப்படும் நபர்களையே தற்போது கைது செய்து, தொடர் விசாரணை நடத்தி வருவதாக, லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர். லண்டன் மட்டுமின்றி, பிரிட்டன் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Twelve people have been arrested after the London terror attack which left seven people dead and 48 injured.

அடுத்த செய்தி