ஆப்நகரம்

முகத்தில் எச்சில் துப்பி வரவேற்கும் ’மாசாய்’ பழங்குடி மக்கள்..!

’மாசாய்’ பழங்குடியின மக்கள் முதன்முறையாக யாரையாவது சந்தித்தாலோ அல்லது வீட்டிற்கு வரும் விருந்தாளிகளையோ முகத்தில் எச்சில் துப்பி வரவேற்கும் விநோதமான பழக்கத்தை கொண்டுள்ளனர்.

TNN 6 Oct 2017, 4:10 pm
வித்தியாசமான வாழ்க்கை முறை, மாறுபட்ட கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு பெயர்பெற்றவர்கள் பழங்குடியின மக்கள். இந்திய பழங்குடி மக்களை விட தான்சானியா, கென்யா ஆகிய நாடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் எல்லாவகையிலும் விநோதமாக இருப்பார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் அவர்களின் தனித்துவமான கலாச்சாரம்.
Samayam Tamil maasai tribal people welcome through spit on the face
முகத்தில் எச்சில் துப்பி வரவேற்கும் ’மாசாய்’ பழங்குடி மக்கள்..!


அந்த வகையில், தான்சானியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் வசிக்கும் ’மாசாய்’ என்ற பழங்குடியின மக்கள் முதன்முறையாக யாரையாவது சந்தித்தாலோ அல்லது வீட்டிற்கு வரும் விருந்தாளிகளையோ அவர்கள் முகத்தில் எச்சில் துப்பி வரவேற்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்குள்ள குழந்தைகள், முதியவர்களை சந்திக்கும் போது தங்கள் கைகளில் எச்சில் துப்பி கை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இவர்களின் விநோதமான பிறந்த குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை. பிறந்த குழந்தையின் முகத்திலும் எச்சில் துப்பி இந்த உலகத்திற்கு வரவேற்கின்றனர் மாசாய் பழங்குடியின மக்கள்.

Maasai tribal people welcome through Spit on the face

அடுத்த செய்தி