ஆப்நகரம்

சபாஷ்... அண்ணனை பிரதமராக பொறுப்பேற்க அழைத்துள்ள பாசக்கார அதிபர் தம்பி!!

இலங்கை பிரதமராக பொறுப்பு வகித்துவந்த ரணில் விக்ரமசிங்க தமது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நாளை பொறுப்பேற்கிறார்.

Samayam Tamil 20 Nov 2019, 10:52 pm
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இத்தேர்தலில் அந்த நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பொதுஜன பெரமுனா கட்சியின் வேட்பாளர்கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார்.
Samayam Tamil mrs


இதையடுத்து, இலங்கையின் 8- ஆவது அதிபராக அவர் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) பதவியேற்றுக் கொண்டார்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் அதிபர் ஆனதன் எதிரொலியாக, "பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்று இலங்கையின் முன்னாள் அதிபரும், கோத்தபய ராஜபக்சவின் சகோதரருமான மகிந்த ராஜபச்ச வலியுறுத்தி வந்தார்.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் பிரபலம் !!

"அதிபர் அங்கம் வகிக்கும் கட்சியைச் சேர்ந்தவர்களே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தால் தான் ஆட்சியை திறம்பட செய்ய முடியும்" எனவும் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ரணில் விக்ரமசிங்க தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக, அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு கடிதம் மூலம் இன்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

அவரது ராஜினாமா ஏற்றுக் கொண்ட அதிபர், தமது சகோதரரும், இலங்கையின் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சவை பிரதமராக பொறுப்பேற்று கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

அதிபரின் அழைப்பை ஏற்று, 16 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அரசின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நாளை பொறுப்பேற்க உள்ளார்.

அடுத்த செய்தி