ஆப்நகரம்

துருக்கி, கிரீஸ் நாடுகளை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமியால் சிதறி ஓடிய மக்கள்!

துருக்கி, கிரீஸ் நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Samayam Tamil 30 Oct 2020, 10:38 pm

துருக்கி, கிரீஸ் ஆகிய நாடுகளை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் கட்டிடங்கள் ஆட்டம்கண்டு இடிந்துவிழுந்துள்ளன.
Samayam Tamil துருக்கி இஸ்மிர்


ஏகன் கடலில் ஏற்பட பயங்கர நிலநடுக்கம் துருக்கி, கிரீஸ் நாடுகளை தாக்கியுள்ளன. 6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ஏகன் கடலில் 16.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. கிரீஸ் நாட்டில் உள்ள சாமோஸ் தீவில் இருந்து வடகிழக்கு திசையில் 13 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாகவும், இது 6.9 ரிக்டர் அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் என ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு அளவியல் மையம் தெரிவித்துள்ளது.



மறுபுறம், 7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் இஸ்மிர் பகுதியில் ஒரு முழு கட்டிடமே முழுமையாக இடிந்து விழுந்துள்ளது. இதில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். ஏகன், மர்மரா பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக துருக்கி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வேறு இடத்துக்கு நடந்து சென்ற பள்ளி: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

கிரீஸ் நாட்டின் கிழக்கு தீவுகள், கிரீஸ் தலைநகர் ஏத்தன்ஸ் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சாமோஸ் மற்றும் இதர தீவுகளில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். பல்வேறு இடங்களில் மலைப் பாறைகள் சரிந்துள்ளன. கிரீஸ், துருக்கி இரு நாடுகளிலும் நில நடுக்கத்திற்கு பின் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

இஸ்மிர் நகரில் மக்கள் அச்சத்தில் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். மேலும், இஸ்மிரில் கடல் அலை எழுந்து நகருக்குள் புகுந்து தெருக்களில் வெள்ளமாக நிற்கிறது. இந்த மினி சுனாமியால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அடுத்த செய்தி