ஆப்நகரம்

வன்முறையால் சிதைக்கப்படும் ரோஹிங்கிய முஸ்லீம்கள்; சூ கியை கண்டிக்க வற்புறுத்தும் மலாலா...!

ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீதான வன்முறை சம்பவங்களுக்கு ஆங் சன் சூ கி கண்டனம் தெரிவிக்கக் கோரி மலாலா வலியுறுத்தியுள்ளார்.

TNN 4 Sep 2017, 4:24 pm
டெல்லி: ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீதான வன்முறை சம்பவங்களுக்கு ஆங் சன் சூ கி கண்டனம் தெரிவிக்கக் கோரி மலாலா வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil malala is waiting for aung san suu kyi to do
வன்முறையால் சிதைக்கப்படும் ரோஹிங்கிய முஸ்லீம்கள்; சூ கியை கண்டிக்க வற்புறுத்தும் மலாலா...!


நோபல் பரிசு வென்ற இளம்பெண் மலாலா யூசுப் தனது டிவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் மியான்மரில் வசிக்கும் ரோஹிங்கிய முஸ்லீம்கள் தொடர் வன்முறை சம்பவங்களை சந்தித்து வருகின்றனர்.

இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இவை தொடர்பான செய்திகளை காணும் போது, மனம் மிகவும் வேதனையில் துடிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக, ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீதான வன்முறை சம்பவங்களுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றேன்.

அதேபோல் நோபல் பரிசு பெற்ற சக மனிதரான ஆங் சன் சூ கியும், தனது கண்டனங்களை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கிறேன். அவருடைய வார்த்தைகளுக்காக உலகம் காத்துக் கொண்டிருக்கிறது.

ரோஹிங்கிய முஸ்லீம்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறை சம்பவங்களால், 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 90,000 பேர் அகதிகளாக வங்கதேசத்தை நோக்கி சென்றுள்ளனர்.

புத்தர்கள் அதிகம் வசிக்கும் மியான்மரில், முஸ்லீம்கள் மீதான வன்முறை மதத்தீவிரவாதத்தை சுட்டிக் காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள இயலாதது. அவர்களுடைய தாய் நாடு மியான்மர் இல்லையென்றால், காலங்காலமாக ரோஹிங்கிய முஸ்லீகள் எங்கே வசித்து வந்தனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

My statement on the #Rohingya crisis in Myanmar: pic.twitter.com/1Pj5U3VdDK— Malala (@Malala) September 3, 2017 தாங்கள் பிறந்த மியான்மரில், ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு நிச்சயம் குடியுரிமை வழங்கியே ஆக வேண்டும். வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கிய அகதிகளுக்கு உணவு, இருப்பிடம், கல்வி உள்ளிட்டவற்றை வழங்கி காத்து வருகின்றனர்.

What Malala Yousafzai is waiting for Myanmar's Aung San Suu Kyi to do.

அடுத்த செய்தி