ஆப்நகரம்

மலாவியில் ஹையெனா சாமியார் எரிக் அனிவா கைது

மலாவியில் பருவமடைந்த பெண்களுக்கு கன்னி கழிக்கும் சடங்கைச் செய்யும் ஹையெனா சாமியார் எரிக் அனிவா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

TNN 28 Jul 2016, 7:14 pm
அபுஜா: மலாவியில் பருவமடைந்த பெண்களுக்கு கன்னி கழிக்கும் சடங்கைச் செய்யும் ஹையெனா சாமியார் எரிக் அனிவா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil malawi arrests hyena man who bragged about sex with children
மலாவியில் ஹையெனா சாமியார் எரிக் அனிவா கைது


மலாவி நாட்டின் தென்பகுதியில் வாழும் பழங்குடியின குடும்பங்களில் பூப்பெய்திய சிறுமிகளை ’பரிசுத்தப்படுத்துதல்’ என்ற பெயரில் தங்களது இனத்தை சேர்ந்த ஹையெனா என்னும் சாமியார்களுடன் முதலில் உடலுறவில் ஈடுபடுத்துவதுவதாக தகவல் வெளிவந்துள்ளது. அப்பகுதி பழங்குடியினரின் புனிதச் சடங்காகவே இது வழக்கத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வயதுக்கு வந்த பெண்களுக்கு இந்த சடங்கு செய்யாவிட்டால் நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்து விடுவார்கள் என்ற மூட நம்பிக்கையும் நிலவுகிறது.

இந்த பழங்குடியினர்களில் ’ஹையெனா’ என்று அழைக்கப்படுகிற பத்து சாமியார்கள் மட்டுமே இந்த சடங்கை செய்கிறார்களாம். அவர்களில் எய்ட்ஸ் நோயாளியான எரிக் அனிவா என்பவரை ராசியானவர் என்று அந்த பழங்குடியினர் மதிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

மலாவியில் நிலவும் இந்த மூடப்பழக்கம் பற்றிய செய்தி அண்மையில் ஊடகங்களில் வெளியானது. இதனை அடுத்து அந்த நாட்டின் அதிபர் பீட்டர் முத்தாரிக்கா எரிக் அனிவா என்ற சாமியாரைக் கைதுசெய்ய உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இதில் தொடர்புடைய மற்ற அனைவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மலாலி பழங்குடியினரிடம் உள்ள இந்த மூட நம்பிக்கை பற்றிய விரிவான செய்தியை படிக்க, http://tamil.samayam.com/news/world/eric-aniva-paid-hyena-to-please-girls-after-puberty/articleshow/53393137.cms

அடுத்த செய்தி