ஆப்நகரம்

சீறும் காளைகள்; களமிறங்கும் தமிழர்கள்; மலேசியாவில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி!

முதல் முறையாக நடத்தப்பட உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு, தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.

TNN 9 Dec 2017, 11:24 am
கோலாலம்பூர்: முதல் முறையாக நடத்தப்பட உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு, தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.
Samayam Tamil malaysia will conduct jallikattu for first time in january
சீறும் காளைகள்; களமிறங்கும் தமிழர்கள்; மலேசியாவில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி!


தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

சீறிப் பாயும் காளைகளை பிடிக்க, இளைஞர்கள் ஆர்வத்துடன் துள்ளிப் பாய்ந்து வருவர். காளைகளைப் பிடிப்பவர்களுக்கு தான் திருமணத்திற்கு பெண் கிடைக்கும் என்று சொல்லப்பட்ட காலங்களும் உண்டு.

அத்தகைய சிறப்பு வாய்ந்த ஜல்லிக்கட்டு மலேசியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 20 காளைகள் பங்கேற்கிறது.

இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு பயிற்சியாளர்கள் மலேசியா சென்றுள்ளனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 15 மாவட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Malaysia will conduct Jallikattu for first time in January.

அடுத்த செய்தி