ஆப்நகரம்

தெரசாவுக்கு புனிதர் பட்டம்: விழாவில் கலந்து கொள்ள ரோம் சென்ற மம்தா பானர்ஜி

TNN 4 Sep 2016, 12:10 am
அன்னை தெரசாவுக்கு இன்று வாடிகனில் நடைபெறும் விழாவில் புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
Samayam Tamil mamata banerjee in rome
தெரசாவுக்கு புனிதர் பட்டம்: விழாவில் கலந்து கொள்ள ரோம் சென்ற மம்தா பானர்ஜி


1910-ம் ஆண்டு பிறந்த அன்னை தெரசா, 1929-ம் ஆண்டு அயர்லாந்தின் லொராட்டா சகோதரிகள் சபையின் ஆசிரியையாக இந்தியாவின் டார்ஜிலிங் நகருக்கு பணிபுரிய வந்தார். அங்கு அவர் பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1950-ம் ஆண்டு, "மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்" என்னும் சேவை அமைப்பை கொல்கத்தாவில் தொடங்கினார்.

ஏழை மக்கள், எச்.ஐ.வி., எயிட்ஸ், தொழுநோய், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னை தெரசா 47 ஆண்டுகள் சேவை புரிந்தார். 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதியன்று, தான் இறக்கும் வரை, பொதுமக்கள் சேவையில் ஈடுபடுத்திக் கொண்டார். அவருடைய நினைவு தினத்தையொட்டி அவருக்கு புனிதர் பட்டம் அளிக்கும் விழா வாடிகன் நகரில் இன்று நடைபெறுகிறது.

இந்த விழாவில் இந்திய அரசு சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 12 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர் . இதற்காக நேற்று டெல்லியில் இருந்து ரோம் நகருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

அடுத்த செய்தி