ஆப்நகரம்

காதுக்குள் கரப்பான்பூச்சி... ஐயையோ இளைஞருக்கு என்னாச்சு?

ஒரு இளைஞரின் காதுக்குள் இருந்து ஒரு டஜன் கரப்பான்பூச்சிகளை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ள சம்பவம் சீனா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​

Samayam Tamil 7 Nov 2019, 5:39 pm
தூங்கும்போது சமயத்தில் காதுக்குள் எறும்புகள் புகுந்துவிடுவதும், உப்புநீர் கரைசலை உற்றி அவற்றை வெளியேற எடுப்பதுமான அனுபவம் நம்மில் பலருக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும். ஆனால், சீனாவைச் சேர்ந்த லிவீ என்ற 24 வயது இளைஞர்களுக்கு விநோதமான ஒரு அனுபவம் நேர்ந்துள்ளது..
Samayam Tamil cc


லிவீ, இன்று காலை (வியாழக்கிழமை), வழக்கம்போல் படுக்கைவிட்டு எழுந்துள்ளார். அப்போது அவரது இடது காதில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளதுடன், காதுக்குள் தொடர்ந்து ஏதோ ஊர்ந்து சென்றுக் கொண்டிருப்பதை போன்ற உணர்வும் ஏற்பட்டுள்ளது.

காது வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்த அந்த இளைஞரை அவரது உறவினர், காது, மூக்கு, தொண்டை மருத்துவ சிகிச்சை நிபுணரிடம் அழைத்துச் சென்றனர்.

அவரது காதுகளை பரிசோதித்த மருத்துவர், இடது காதுக்குள் கரப்பான்பூச்சிகள் புகுந்து ஓடி விளையாடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சீனாவின் வலைக்குள் சிக்காமல் "நோ' சொன்ன பிரதமர் மோடி!!

உடனே, அறுவை சிகிச்சையின்றி, நுட்பமான சிகிச்சை முறையில் பத்துக்கும் மேற்பட்ட கரப்பான்பூச்சிகளையும், அதன் தாய் கரப்பான்பூச்சியையும் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

இரவு சாப்பாட்டின்போது மீதமாகும் உணவுகளை, தமது படுக்கை அறைக்கு அருகே வைத்துவிட்டு தூங்கும் பழக்கம் லிவீக்கு இருந்துள்ளது. அந்த உணவுகளை உண்ணவரும் கரப்பான்பூச்சிகள், அப்படியே அவரது காதுக்குள் புகுந்து ஜாலியாக விளையாடியுள்ளன.

கரப்பான்பூச்சிகள் எத்தனை நாட்கள் லிவீயின் காதுக்குள் குடித்தனம் நடத்தின என்பதை திட்டவட்டமாக கணிக்க முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதேபோன்று கடந்த ஆண்டு, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் காதில் புகுந்த கரப்பான்பூச்சி, ஒன்பது நாள்கள் அங்கு தஞ்சம் புகுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி