ஆப்நகரம்

தன்னை தானே திருமணம் செய்து கொண்ட இளைஞர்: இது என்னடா புது டிசைனா இருக்கு?

பிரேசிலில் தன்னை தானே இளைஞர் ஒருவர் திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 6 Nov 2020, 10:55 pm
பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞர் டியோகோ ரபேலோ (33) என்பவருக்கும் விட்டர் ப்யூனோ என்ற பெண்ணிற்கும் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்களது திருமணத்திற்கு 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேதி குறிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil டியோகோ ரபேலோ
டியோகோ ரபேலோ


இதனிடையே, இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் டியோகோ ரபேலோவை திருமணம் செய்ய அப்பெண் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால், முதலில் அதிர்ச்சியடைந்த அவர், திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த முடிவெடுத்தார். ஆனால், அவர் எடுத்த முடிவுதான் விசித்திரமானது. அதன்படி, திருமணம் நெருங்கிய சமயத்தில் நிச்சயிக்கப்பட்ட பெண் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால், தன்னை தானே திருமணம் செய்து கொள்ள டியோகோ ரபேலோ முடிவெடுத்தார்.

இதையடுத்து, பஹியா எனுமிடத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் டியோகோ ரபேலோ தன்னை தானே கடந்த மாதம் 17ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டொனால்ட் ட்ரம்ப்பை திருப்பி அடித்த கிரெட்டா துன்பெர்க்!

டியோகோ ரபேலோ


இதுகுறித்து அவர் கூறுகையில், என் வாழ்க்கையில் நான் மிகவும் நேசிக்கும் நபர்களுடன் இருப்பதால், இன்று என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்றாகும். சோகத்தை கொண்டாட வேண்டும் என்பதல், அதனை நான் நகைச்சுவையாக மாற்றினேன்” என்று தெரிவித்துள்ளார்.

என்னுடைய இந்த திருமணத்தின் மூலம் பாதிக்கப்பட்டவனாக மக்களுக்கு செய்தி கூற விரும்பவில்லை. மகிழ்ச்சியாக இருக்க நான் ஒரு திருமணத்தை சார்ந்து இல்லை என்பதையே கூற விரும்புகிறேன். நான் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன், ஆனால் என் மகிழ்ச்சி அதைப் பொறுத்து இருக்க முடியாது என்றும் டியோகோ ரபேலோ தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி