ஆப்நகரம்

ஊருக்கு போகும் வழியை மறந்து 500 கி.மீ சைக்கிளில் சுற்றிய மனிதர்..!

சீனாவில் ஊருக்கு போகும் வழியை மறந்த ஒருவர் 500 கி.மீ தூரத்திற்கு வேறு பாதையில் பயணித்த சம்பவம் நடந்துள்ளது.

TNN 29 Jan 2017, 1:27 pm
சீனாவில் ஊருக்கு போகும் வழியை மறந்த ஒருவர் 500 கி.மீ தூரத்திற்கு வேறு பாதையில் பயணித்த சம்பவம் நடந்துள்ளது.
Samayam Tamil man who travelled 500 k m in wrong way
ஊருக்கு போகும் வழியை மறந்து 500 கி.மீ சைக்கிளில் சுற்றிய மனிதர்..!


சீனாவில் உள்ள ஹேலூங்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த ஒருவர்,1700 கி.மீ தொலைவில் உள்ள ரிஜோ என்ற சீன நகரத்தில் பணிபுரிந்து வருகிறார்.சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் சீனப்புத்தாண்டு கொண்டாடப்பட்டது.எனவே புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக,தனது சைக்கிளில் ஹேலூங்ஜியாங்கில் உள்ள தனது சொந்த ஊரான கிக்கியாருக்கு செல்ல முடிவெடுத்தார்.

டிசம்பர் மாதம் தனது பயணத்தை துவங்கிய அவர்,30 நாட்களுக்கு பிறகு மத்திய சீனாவில் உள்ள அன்ககுவோவில் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.அவர்களிடம் விசாரித்த போதுதான்,அவர் வழி மாறி 500 கி.மீட்டர் பயணித்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் தனது சொந்த ஊருக்கு ரயிலில் செல்வதற்காக காவலர்களும்,அங்கிருக்கும் சில பொதுமக்களும் பணம் அளித்து அவரை பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர்.இப்போதுதான் இந்த செய்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Man who travelled 500 k.m in wrong way

அடுத்த செய்தி