ஆப்நகரம்

வால்மார்ட் மாலில் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு- பலர் பலியானதால் அதிர்ச்சி!

வால்மார்ட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலர் பலியாகி உள்ளதால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 4 Aug 2019, 10:28 am
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா டெக்சாஸ் மாகாணத்தின் எல் பசோ பகுதியில் வால்மார்ட் ஷாப்பிங் மால் ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று ஏராளமான பொதுமக்கள் பொருட்கள் வாங்க வந்திருந்தனர்.
Samayam Tamil Texas Attack


அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென மாலிற்குள் நுழைந்தார். அவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளான். இதனை உணர்ந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு, அங்கும், இங்கும் ஓடினர்.

Also Read: மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் ஏன் இந்தியாவுக்கு கப்பலில் தப்பி வந்தார்?

இந்த துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை மடக்கிப் பிடித்து, கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக அம்மாகாண ஆளுநர் கிரெக் அபார்ட் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்: சுனாமி பீதியில் பொதுமக்கள்..!

இந்நிலையில் இந்த சம்பவம் மிகுந்த வேதனையை தருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், எல் பசோவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் துயரமானது மட்டுமல்ல. மிகவும் கோழைத்தனமானது.

இந்த நிகழ்வை கண்டிக்கும் அனைத்து மக்களுடனும் கைகோர்த்து நானும் நிற்கிறேன். அப்பாவி மக்களை கொன்று குவித்த, இந்த செயலுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: காஷ்மீர் விவகாரத்தில் ஆர்வம் காட்டும் டிரம்ப்; மோடிக்கு நெருக்கடி?

அடுத்த செய்தி