ஆப்நகரம்

சிரியா தாக்குதல்; 500 பேர் உட்பட 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி!

சிரிய அரசு நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில் அப்பாவி மக்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 Feb 2018, 10:18 am
சிரிய அரசு நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில் அப்பாவி மக்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil mayhem in syria 500 killed including 120 children in one of civil wars bloodiest weeks
சிரியா தாக்குதல்; 500 பேர் உட்பட 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி!


சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அதிபரின் ஆதரவு படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 7 வருடங்களாக அதிபர் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.



இந்நிலையில் சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, நிகழ்த்தப்பட்டு வரும் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களின் 500-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.



கிழக்கு கெளட்டா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ரஷியா மற்றும் சிரியா படையினர் நிகழ்த்தி வரும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 120க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடங்குவர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவியை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்துள்ளனர். இந்த சூழலை பயன்படுத்தி போராளிகளை விரைவில் அழிக்கும் நோக்கில் அரசு தரப்பு கூட்டுபடையினர் கிழக்கு கெளட்ட பகுதிகளில் தொடர் வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஓர் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சிரியாவில் நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு வருகின்றனர். ஏராளமான குழந்தைகள் மனசாட்சி இல்லாமல் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது சிரியா தாக்குதலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிரியா தாக்குதலை கண்டித்தும், அப்பாவி மக்களை காப்பற்ற வலியுறுத்தியும் பல்வேறு சமூக அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி