ஆப்நகரம்

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் மெக்சிகன் நாளிதழுக்கு மூடுவிழா

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மெக்சிகன் நாளிதழுக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது.

TNN 3 Apr 2017, 1:55 pm
மெக்சிகோ: பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மெக்சிகன் நாளிதழுக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil mexican newspaper closes citing insecurity for journalists
பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் மெக்சிகன் நாளிதழுக்கு மூடுவிழா


பத்திரிகையாளர்களுக்கு ஒரு நாட்டின் 4வது தூண் என்று அழைக்கப்படுகிறது. அரசிற்கும், மக்களுக்கும் இடையேயான இடைவெளியை நிரப்பி, அநீதிக்கு எதிராக குரல் எழுப்பி, சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். பத்திரிகையாளர்களுக்கு மோசமான நாடாக மெக்சிகோ விளங்கி வருகிறது. கடந்த 1992ஆம் ஆண்டு முதல், 38 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதனால் அங்கு பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் மெக்சிகோவில் வெளியாகி வந்த நார்டி(Norte) என்ற நாளிதழுக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியான நாளிதழில், வாசகர்களுக்கு முக்கிய குறிப்பு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ‘ இன்றுடன் நாளிதழ் நிறுத்தப்படுகிறது. சமீபத்தில் சிஹுஹா நகரில் பத்திரிகையாளர் மிரோஸ்லாவா கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் லா ஜோர்னடாவில் செய்தியாளராக பணியாற்றினார். மேலும் நார்டி நாளிதழிலும் இணைந்து பணியாற்றி வந்துள்ளார். அவரது இழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இனிமேல் எந்த ஒரு பத்திரிகையாளருக்கு இதுபோன்ற துயரங்கள் ஏற்படக்கூடாது என்றும் அந்நிறுவனத்தின் செயல் அதிகாரி ஆஸ்கார் கண்டூ தெரிவித்துள்ளார்.

A Mexican newspaper in the border city of Juarez says it is closing due to the climate of insecurity and impunity for killings of journalists in one of the world's deadliest countries for media workers.

அடுத்த செய்தி