ஆப்நகரம்

காணாமல் போகும் சிறுவர்கள்.. கல்லறைகளில் பிணமாக கிடைக்கும் மர்மம்!

காணாமல் போன சிறுவர்கள் பொது கல்லறைகளில் பிணமாக கிடைக்கும் அவலம். அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்கள்.

Samayam Tamil 2 Mar 2021, 9:13 pm
காணாமல் போகும் சிறுவர்கள் மர்மமான முறையில் கல்லறைகளில் பிணங்களாக கண்டெடுக்கப்படுவது மெக்சிகோ நாட்டை சேர்ந்த பெற்றோரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு இயந்திர தோல்வியால்தான் இந்த கொடுமைகள் நடைபெறுவதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
Samayam Tamil mexico missing persons are stuck in govt graves due to administrational failure
காணாமல் போகும் சிறுவர்கள்.. கல்லறைகளில் பிணமாக கிடைக்கும் மர்மம்!


​நாசமாகும் மெக்சிகோ

போதை மருந்து சார்ந்த வன்முறைகளாலும், போதை மருந்து வியாபார கும்பல்களிடையே ஏற்படும் பழிவாங்கும் சம்பவங்களாலும் மெக்சிகோ நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 80,000 பேர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

​பிணங்களாக கிடைத்த மர்மம்

கடந்த பத்து ஆண்டுகளாக காணாமல் போன நபர்கள் அரசு கல்லறைத் தோட்டங்களில் பிணமாக கிடைத்து வருகின்றனர். இதனால், இறந்தவர்களின் குடும்பத்தினரும், உறவினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். காணாமல் போன ஆயிரக்கணக்கானோர் பொது கல்லறைகளிலேயே புதைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

​பதறவைக்கும் புள்ளிவிவரங்கள்

2006ஆம் ஆண்டில் காணாமல் போன அடையாளம் தெரியாத சுமார் 36,000 பிணங்கள் அரசிடம் கிடைத்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஆயிரக்கணக்கான பிணங்கள் கிடைக்கின்றன. பொது கல்லறை தோட்டங்களிலேயே 28,000க்கும் மேற்பட்ட பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளன. மேலும், 2,589 பிணங்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் நிறைய பிணங்கள் இருக்கின்றன. இந்த கொடுமைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

அடுத்த செய்தி