ஆப்நகரம்

அமெரிக்க இடைக்கால தேர்தல்; பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை இழந்த டிரம்ப் கட்சி!

வாஷிங்டன்: இடைக்காலத் தேர்தலில் இருகட்சிகளும், இரு அவைகளிலும் தனித்தனியே பெரும்பான்மை பெற்றுள்ளன.

Samayam Tamil 7 Nov 2018, 12:33 pm
இருகட்சி ஆட்சி முறை நடைபெற்று வரும் அமெரிக்காவில் கீழவை, மேலவை என இரு அவைகள் இருக்கின்றன. இவை முறையே செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என்று அழைக்கப்படுகின்றன.
Samayam Tamil Trump


செனட் சபையில் 100 உறுப்பினர்களும், பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்களும் இருக்கின்றன. இந்நிலையில் 435 உறுப்பினர்களுக்கான பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது.

இதையொட்டி பிரதிநிதிகள் சபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் வழக்கமாக அதிபர் தேர்தல் உடன் சேர்த்து நடத்தப்படும். ஆனால் இம்முறை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்டதால், இடைக்கால தேர்தல் என்று ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன.

பிரதிநிதிகள் சபை தேர்தலுடன், 35 செனட் உறுப்பினர்கள் மற்றும் 36 மாநில ஆளுநர்களுக்கான தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் அந்நாட்டு மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இதன் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற உடன், வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கின. தேர்தல் முடிவுகளின் படி, பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது.

இது டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு பின்னடைவாகும். அதேபோல் செனட் சபையில் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி