ஆப்நகரம்

ஆப்கனில் அமெரிக்க பல்கலை மீது தீவிரவாத தாக்குதல்: 2 பேர் பலி; 5 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகம் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதோடு, மேலும் பலர் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

TNN 24 Aug 2016, 11:09 pm
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகம் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதோடு, மேலும் பலர் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil militants attack american university of afghanistan in kabul at least 2 killed five injured several feared trapped
ஆப்கனில் அமெரிக்க பல்கலை மீது தீவிரவாத தாக்குதல்: 2 பேர் பலி; 5 பேர் காயம்


அந்நாட்டின் தலைநகர் காபூலில் அமைந்துள்ள அமெரிக்க பல்கலைக்கழக வளாகத்திற்குள், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் தரித்த அடையாளம் தெரியாத நபர்கள் இன்று மாலை அத்துமீறி நுழைந்தனர். அங்கிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் என பார்ப்பவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டபடி, முன்னேறிய அந்த தீவிரவாதிகள், ஏராளமான மாணவர்கள் மற்றும் ஊழியர்களை சிறைபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல்கட்ட தகவலின்படி, 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் காயங்களுடன் தப்பி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில், துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கும் சத்தமும், புகை மூட்டமாகவும் காட்சியளிப்பதாக, அங்கிருந்து தப்பி ஓடிவந்த, 100க்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக, வெளிநாட்டு மாணவர்கள், ஆசிரியர்களையே அந்த தீவிரவாதிகள் சிறைபிடித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் தற்போது தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. குண்டுஸ் உள்ளிட்ட வட பகுதி மாவட்டங்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள தலிபான்கள், சர்வதேச கவனத்தை ஈர்க்கும் விதமாக, இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என, அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி