ஆப்நகரம்

5 வீடு, 1.4 கோடி சொத்து: கோடீஸ்வர பிச்சைக்காரர் கைது!

ஐந்து வீடு, 3 மில்லியன் பவுண்டு சொத்து வைத்திருந்த கோடீஸ்வர பிச்சைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 31 Oct 2020, 11:18 pm

பிச்சைக்காரர்களின் கையில் ஏராளமான ரொக்கப் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகளை படித்திருப்போம். சில பிச்சைக்காரர்கள் ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் பணத்தை தொண்டு பணிகளுக்காக வழங்கியதையும் படித்திருப்போம். ஆனால், கோடிக்கணக்கில் பணம் வைத்திருந்த பிச்சைக்கார பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil Representational image


எகிப்து நாட்டை சேர்ந்த பெண் நபிசா. இவருக்கு வயது 57. இவர் வீல்சேரில் அமர்ந்துகொண்டு தனது உடல் நிலையை காரணமாக வைத்து பிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், பிச்சையெடுத்த பிறகு நபிசா சாதாரணமாக நடந்து செல்வதை பார்த்துள்ளதாக பலரும் கூறுகின்றனர்.

மக்கா மசூதியில் விபத்து: யாத்ரீகர்கள் அதிர்ச்சி!

எகிப்து நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களில் நபிசா பிச்சை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நபிசாவுக்கு சொந்தமாக ஐந்து கட்டிடங்களும், வங்கிக் கணக்குகளில் 3 மில்லியன் எகிப்திய பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 1.4 கோடி ரூபாய்) இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

நபிசாவுக்கு கால்கள் நலமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கர்பியா, கலுபியா ஆகிய இடங்களில் நபிசாவுக்கு சொந்தமாக ஐந்து குடியிருப்பு கட்டடங்கள் இருப்பதாகவும், இரண்டு வங்கிக் கணக்குகளில் சுமார் 3 மில்லியன் பவுண்டுகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நபிசாவை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்.

அடுத்த செய்தி