ஆப்நகரம்

ஆப்கானில் இருந்து பாகிஸ்தானை நோக்கி ஏவுகணைகள் வீச்சு

ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டதை தொடர்ந்து அந்த நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

TNN 3 Apr 2017, 3:12 pm
இஸ்லமாபாத் : ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டதை தொடர்ந்து அந்த நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Samayam Tamil missiles fired into pakistan from afghanistan no casualties
ஆப்கானில் இருந்து பாகிஸ்தானை நோக்கி ஏவுகணைகள் வீச்சு


ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லையில் இருந்து பாகிஸ்தான் நாட்டுக்குள் நேற்று நான்கு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பாக்தியா மாகாணத்தில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.இவ்வாறு ஏவப்பட்ட ஏவுகணைகளில் குர்ராம் என்ற பகுதியில் உள்ள கடையை தாக்கியுள்ளது. இதனால் அந்த கடை பாதிப்புக்குள்ளானது.

மேலும் வீசப்பட்ட மற்றொரு குண்டு மசூதியின் அருகே விழுந்தது. பாகிஸ்தானின் குர்ராம் பகுதியான பழங்குடி மக்கள் வாழும் பகுதியாகும். இந்த பகுதி இருநாட்டு எல்லைக்கருகில் இருப்பதால் இந்த பகுதி எப்போதும் பதற்றமாகவே காணப்படும்.மற்ற இரு ஏவுகணைகள் காச்கினா பகுதியில் உள்ள கல்லறை பகுதியில் விழுந்து உள்ளது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் , தங்களது பகுதியில் ஏவுகணைகள் விழுந்ததை தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். இந்த ஏவுகணை தாக்குதலால் உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை.

missiles fired into pakistan from afghanistan, no casualties

அடுத்த செய்தி