ஆப்நகரம்

துருக்கியில் ஓரினச்சேர்க்கையாளர் தலை துண்டித்து கொலை..!

துருக்கியில் ஓரினச்சேர்க்கையாளராக அறியப்பட்ட சிரிய அகதி,தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

TNN 5 Aug 2016, 5:18 pm
துருக்கியில் ஓரினச்சேர்க்கையாளராக அறியப்பட்ட சிரிய அகதி,தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil missing gay syrian refugee found beheaded in istanbul
துருக்கியில் ஓரினச்சேர்க்கையாளர் தலை துண்டித்து கொலை..!



சிரியாவைச் சேர்ந்த முகமது விசம் சங்கரி என்ற சிரிய அகதி,ஓராண்டுக்கு முன்னர் துருக்கியிலுள்ள இஸ்தான்புன் நகரில் தஞ்சம் புகுந்தார்.இவர் ஒரினச்சேர்க்கையாளர் என கூறப்படுகிறது.திடீரென இரண்டு நாட்கள் முன்னர் இஸ்தான்புல்லில் இருந்து காணாமல்போன சங்கரி,நேற்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்படுள்ளார்..இந்த தகவலை துருக்கியில் இயங்கி வரும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான உரிமை அமைப்பு உறுதி செய்துள்ளது.


துருக்கியில் ஓரினச்சேர்க்கை குற்றமாக கருதப்படுவதில்லை.ஆனால் துருக்கியில் செயல்பட்டு வரும் ஆயுதம் தாங்கிய போராட்ட குழுவினர்,ஓரினச்சேர்க்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ஓரினச்சேர்க்கையாளரான சங்கரி கொல்லப்பட்டிருப்பது,அந்த இயக்கத்தினரின் வேலையாக இருக்குமோ என துருக்கி காவல்துறையினர் சந்தேகின்றனர்.


மிகக் கடுமையாக தாக்கப்பட்டு,பின்னர் தலை துண்டித்து சங்கரி கொல்லப்பட்டுள்ளார்.அவரின் உடலும் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது.சங்கரியுடன் தங்கியிருந்தவர்களால்,அவரின் உடையை கொண்டே தலையில்லாத உடல் சங்கரியுடையதுதான் என கண்டுபிடிக்க முடிந்தது.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள இஸ்தான்புல் காவல்துறையினர்,குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி