ஆப்நகரம்

ஹேப்பி நியூஸ்: விற்பனைக்கு வரும் கொரோனா தடுப்பூசி!

கொரோனா தடுப்பூசியின் விலை நிலவரத்தை அறிவித்தது மாடெர்னா நிறுவனம்.

Samayam Tamil 22 Nov 2020, 12:36 pm
உலகையே கிட்டதட்ட ஒரு ஆண்டு காலமாக கட்டிப்போட்டுள்ளது கொரோனா பெருந்தொற்று. கோடிக்கணக்கான மக்கள் உடல்ரீதியாக பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். லட்சக்கணக்கானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil moderna to charge rs 1855 rs 2755 for covid 19 vaccine
ஹேப்பி நியூஸ்: விற்பனைக்கு வரும் கொரோனா தடுப்பூசி!


சோதனையில் உள்ள 150 தடுப்பூசிகள்!

மேலும் கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் அமல்படுத்தப்படும் பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. இதிலிருந்து மீண்டு வர மேலும் சில ஆண்டுகள் ஆகும் என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டறிய சர்வதேச மருத்துவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுக்க கொரோனாவுக்காக சுமார் 150 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு நாட்டு தடுப்பூசிகள் பல்வேறு கட்ட சோதனையில் உள்ளன.

எத்தனை சதவீதம் பாதுகாப்பானது?

இந்நிலையில் ஒவ்வொரு தடுப்பூசியும் எவ்வளவு திறனுடன் உள்ளன என்பது குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர் நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி கொரோனாவை தடுப்பதில் 90 விழுக்காடு திறனுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ரஷ்யா சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் தடுப்பூசி கொரோனாவை தடுப்பதில் 92 விழுக்காடு திறனுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஃபைசர் தடுப்பூசியின் இறுதிகட்ட சோதனையில் கொரோனாவை தடுப்பதில் 95 விழுக்காடு திறனுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வரும் மாடெர்னா தடுப்பூசி!

இதைத்தொடர்ந்து, அமெரிக்காவை சேர்ந்த மாடெர்னா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி கொரோனாவை தடுப்பதில் 94.5 விழுக்காடு திறனுடன் இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து மாடெர்னா நிறுவனம் தடுப்பூசியை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளது.

விலை எவ்வளவு தெரியுமா?

சம்மதிக்காத ரஜினி; மனம் மாறிய சசிகலா: கூட்டணிக்கு பின்னால் உள்ள கணக்கு!

கொரோனா தடுப்பூசியை ரூபாய் 1855 முதல் ரூபாய் 2,755 வரை விற்க உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி மட்டும் தான் தீர்வு என்ற நிலையில் மக்களின் எதிர்பார்ப்பு தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பதாகவே உள்ளது. மாடெர்னா நிறுவனம் விலை நிலவரத்தை அறிவித்த நிலையில் மற்ற நிறுவனங்களும் போட்டி போட்டு விலையை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி