ஆப்நகரம்

தீவரவாத அமைப்புகளை ஒடுக்க, இந்தியா-இங்கிலாந்து பேச்சுவார்த்தையில் ஒப்புதல்!

இந்திய பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் தெரசா மே இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு இணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Apr 2018, 11:51 pm
இந்திய பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் தெரசா மே இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு இணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil தீவரவாத அமைப்புகளை ஒடுக்க, இந்தியா-இங்கிலாந்து பேச்சுவார்த்தையில் ஒப்புதல்!
தீவரவாத அமைப்புகளை ஒடுக்க, இந்தியா-இங்கிலாந்து பேச்சுவார்த்தையில் ஒப்புதல்!


இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணமாக ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஸ்வீடன் பயணத்தை முடித்து, இங்கிலாந்துக்குச் சென்ற மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

இதன்பின் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவுடன் நடந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் எந்தெந்த துறைகளில் ஒன்றிணைந்து செயல்படுவது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக இருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாஸ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்வா உள்ளிட்ட தீவிரவ அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

அடுத்த செய்தி