ஆப்நகரம்

12 நாட்களில் 3,300 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது; மலேசிய அரசு நடவடிக்கை...!

12 நாட்களில் 3,300 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்து, மலேசிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

TNN 14 Jul 2017, 1:23 pm
கோலாலம்பூர்: 12 நாட்களில் 3,300 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்து, மலேசிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Samayam Tamil more than 3000 arrested in malaysia immigration raids
12 நாட்களில் 3,300 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது; மலேசிய அரசு நடவடிக்கை...!


மலேசியாவில் முறையாக பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நிர்ணயித்திருந்தது. இதையடுத்து சுமார் 161,000 தொழிலாளர்கள் தற்போது வரை பதிவு செய்துள்ளனர். கடந்த ஜூன் 30 ஆம் தேதியோடு காலக்கெடு முடிந்தது. இதையடுத்து மலேசிய குடிவரவுத்துறை 3,323 தொழிலாளர்களை சிறைப்படுத்தியுள்ளது. இதில் 1,230 பங்களாதேஷிகள், 825 இந்தோனேசியர்கள், மியான்மரைச் சேர்ந்த 273 பேர், வியட்னாமைச் சேர்ந்த 119 பேர், தாய்லாந்தைச் சேர்ந்த 123 பேர், பிலிப்பைன்சை சேர்ந்த 95 பேர் உள்ளடங்கியுள்ளனர்.

பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள அருகாமை நாடுகளை குறிவைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் வழியாக அப்பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர். அவர்கள் குறைந்த ஊதியத்திற்கு கடுமையான வேலைகளை செய்யும் தொழிலாளர்களாக விசா இன்றி மலேசியாவில் தங்க வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

More Than 3,000 Arrested in Malaysia Immigration Raids.

அடுத்த செய்தி