ஆப்நகரம்

கொல்லப்படும் லட்சக்கணக்கான சுறா மீன்கள் - அதிர்ச்சியூட்டும் பின்னணி!

உலகையே அச்சுறுத்தி வரும் வைரஸ் தொற்றுக்கு தீர்வு காண சுறாக்கள் கொல்லப்படும் விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Oct 2020, 3:39 pm
சீனாவின் வுஹான் நகரில் தொடங்கி உலகின் மூலை முடுக்கெல்லாம் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டு பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வர முடியாமல் பலரும் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை குணப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருவதால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் களமிறங்கின.
Samayam Tamil more than 5 lakh sharks may slaughtered for covid 19 vaccine preparation
கொல்லப்படும் லட்சக்கணக்கான சுறா மீன்கள் - அதிர்ச்சியூட்டும் பின்னணி!


கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு

உலகின் முதல் நாடாக ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளாமல் அவசர அவசரமாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. மேலும் மாடர்னா மற்றும் ஃபைசர் நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எதிர்பார்த்த ஒன்று தான்.

சுறாவில் இருக்கும் ஸ்குவாலின்

பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். உலகின் பல்வேறு கொரோனா தடுப்பூசிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்களில் ஸ்குவாலின் (Squalene) என்ற வேதிப்பொருளும் ஒன்று. இது சுறா மீன்களில் அதிகமாக காணப்படுகிறது. வர்த்தக ரீதியான தடுப்பூசிகளில் பெரும்பாலும் ஸ்குவாலின் வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனைச் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.


கொரோனா பரிசோதனையால் மூளைக்கு ஆபத்து!

கொல்லப்படும் சுறா மீன்கள்

இது சர்வதேச உயிரியல் ஆர்வலர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில் சுறா மீன்களின் நலன் சார்ந்து செயல்படும் ஷார்க் அல்லீஸ் (Shark Allies) என்ற நிறுவனம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. சுறாக்கள் கொல்லப்படுவது குறித்து கூறுகையில், உலக மக்கள் அனைவரும் ஒரு டோஸ் தடுப்பூசி பெற வேண்டுமெனில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் சுறாக்கள் கொல்லப்பட வேண்டி வரும்.

சூழலியல் ஆர்வலர்கள் வேதனை

இரண்டு டோஸ் தடுப்பூசி பெறுவதற்கு 5 லட்சம் சுறாக்கள் கொல்லப்படும் சூழல் ஏற்படும். ஒரு டன் ஸ்குவாலின் பெறுவதற்கு 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் சுறாக்கள் வரை கொல்லப்படும். இவ்வாறு லட்சக்கணக்கில் சுறா மீன்கள் கொல்லப்படுவதால் கடல் சூழலியல் மண்டலம் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்கும். மீண்டும் சரிசெய்ய முடியாத அளவிற்கு பேரழிவை ஏற்படுத்திவிடும் என்று அச்சப்படுகின்றனர்.

ஸ்குவாலினுக்கு மாற்று தேவை

எனவே ஸ்குவாலின் வேதிப்பொருளுக்கு மாற்றாக தாவரம் சார்ந்த அல்லது வேறு செயற்கையான வேதிப்பொருட்களின் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கான ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபடலாம். நாங்கள் கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பை தடுக்கும் நோக்கில் எந்தவித கருத்தையும் கூறவில்லை. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. மனித குலத்தை கொரோனாவின் பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை.


கொரோனா தடுப்பூசி பரிசோதனை: ஊசி போட்டவுடன் ஏற்படும் பாதிப்புகள்; அதிகரிக்கும் பதற்றம்!

விஞ்ஞானிகளுக்கு கோரிக்கை

இருப்பினும் சுறாக்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு விலங்குகளிடம் இருந்து மூலப்பொருட்களை எடுக்கும் வழக்கத்தை நீண்ட காலத்திற்கு தொடரக் கூடாது. அதற்கு மாற்றாக தாவரங்களில் இருந்து வேதிப்பொருட்களை பயன்படுத்தும் அளவிற்கு மேம்பட்ட ஆய்வுகளை நடத்த வேண்டும். இதன்மூல சூழலியல் மண்டலத்தில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்று கூறுகின்றனர்.

அடுத்த செய்தி