ஆப்நகரம்

நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி, 15 பேர் மாயம்; சிலி நாட்டில் சோகம்

சிலி நாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 17 Dec 2017, 7:26 am
சிலி நாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil mudslide in southern chile kills five at least 15 missing
நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி, 15 பேர் மாயம்; சிலி நாட்டில் சோகம்


சிலி நாட்டில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள சுற்றுலா பகுதியான வில்லா சாண்டா லூசிய என்ற பகுதியில், நேற்று கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவு ஏற்பட்டதன் விளைவாக, 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 15க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்றும் அவர்களை தேடும் முயற்சியில் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

மேலும், தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், மக்கள் அனைவரும் கவனத்துடன் இருக்குமாறு, சிலி நாட்டு அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது,.

அடுத்த செய்தி