ஆப்நகரம்

பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சிறையில் இருந்து திடீர் விடுதலை!

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Samayam Tamil 7 Aug 2019, 3:47 pm
மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதற்கு பின்னணியில் இருந்து செயல்பட்டவர் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் ஆவார்.
Samayam Tamil Hafeez


இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸை கைது செய்யவும், சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கவும் இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு அழுத்தம் கொடுத்தது. இதன் விளைவாக ஹபீஸ் சயீத் மற்றும் அவரது அமைப்பினர், கடந்த மாதம் 17ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

Also Read: Article 370: பயத்தில் ஓட்டம் பிடித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!!

இந்த அமைப்பைச் சேர்ந்த 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். மேலும் ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் ஹபீஸ் சயீத் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.

இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில், பாகிஸ்தான் சிறையில் இருந்து பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.

Also Read: வறுமை, வேலையின்மை- ஆனா லாட்டரியில அடிச்சுது ஜாக்பாட்; துபாயில் இந்தியருக்கு அதிர்ஷ்டம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த சூழலில் ஹபீஸ் சயீத் விடுதலை பரபரப்பை கிளப்பியுள்ளது.

Also Read: தூத்துக்குடியில் சிக்கிய மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் மீண்டும் அந்நாட்டு அரசிடம் ஒப்படைப்பு!

அடுத்த செய்தி