ஆப்நகரம்

ஏழு குழந்தைகளை கொடூரமாக கொன்ற மியான்மர் ராணுவம்: ரோஹிங்கியா அகதியின் குமுறல்

மியான்மரில் ரோஹிங்கியா இஸ்லாமியராக பிறந்த நூர் ஆயிஷா தனது கடைசி ஒரு மகளுடன் படகு வழியே வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

TNN 15 Dec 2016, 11:37 am
மியான்மரில் ரோஹிங்கியா இஸ்லாமியராக பிறந்த நூர் ஆயிஷா தனது கடைசி ஒரு மகளுடன் படகு வழியே வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
Samayam Tamil myanmar army brutally killed my 7 sons says rohingya refugee
ஏழு குழந்தைகளை கொடூரமாக கொன்ற மியான்மர் ராணுவம்: ரோஹிங்கியா அகதியின் குமுறல்


கடந்த அக்டோபர் மியான்மர் ராணுவம் தனது கிராமத்திற்குள் வந்த சம்பவத்தை விவரித்துள்ள ஆயிஷா, ‘ இருபதுக்கும் அதிகமான பர்மிய ராணுவத்தினர் எங்களது வீட்டிற்கு முன்பு வந்து, எங்கள் அனைவரையும் வீட்டு முற்றத்திற்கு வரச் சொல்லி உத்தரவிட்டனர். எனது ஐந்து குழந்தைகளை ஒரு அறையில் தள்ளி தாழ்ப்பாளிட்டனர். அந்த அறையை குண்டால் வெடிக்கச் செய்து என்னுடைய ஐந்து குழந்தைகளையும் உயிரோடே எரித்துவிட்டனர். எனது இரண்டு பெண் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி பின் கொன்றனர். எனது கணவனை கொன்று என்னையும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினர். எனது ஐந்து வயது குழந்தை தில்நவாஸ் பேகம் அருகிலிருந்த வீட்டில் மறைந்திருந்ததால் அவள் மட்டும் தப்பித்திருக்கிறாள்' எனக் கூறியிருப்பது பர்மாவில் ரோஹிங்கா முஸ்லீமகள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட வன்முறையை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பர்மாவில் ரோஹிங்க இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ரக்ஹைன்(Rakhine) மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. நூர் ஆயிஷா, அம்மாநிலத்தில் உள்ள கியெட் யோ பியன் (Kyet Yoe Pyin) பகுதியைச் சேர்ந்தவர். மியான்மரை ராணுவ ஆட்சியிலிருந்து மீட்டவராக பார்க்கப்படும் ஆங் சென் சூகி, தற்போதைய அரசாங்கத்தில் வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருக்கும் நிலையிலும் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் ராணுவ வன்முறைகளை கண்டுகொள்ளாதவராக செயல்பட்டு வருகிறார். இதனால் அவரின் நோபல் பரிசை திரும்ப பெற வேண்டும் என்ற குரல்களும் வலுத்திருக்கின்றன.

ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மீதான பாலியல் வன்முறைகள் இன ரீதியாக தூண்டப்படும் வன்முறைகளாக சுட்டிக்காட்டியுள்ளது ஐக்கிய நாடுகள் சபை. ஆனால் இப்படியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மியான்மர் அரசாங்கம் மறுத்து வருகிறது. பெருமளவிலான ரோஹிங்கியா இஸ்லாமிய அகதிகள் வங்கதேசம், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தஞ்சம் புக முயற்சிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Myanmar Army brutally killed my 7 sons says rohingya Refugee.

அடுத்த செய்தி