ஆப்நகரம்

சட்டவிரோத பயணம்; மியான்மர் தொழிலாளர்கள் தாய்லாந்தில் மீட்பு...!

மியான்மரின் பகோ என்ற பகுதியிலிருந்து சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்ட 55 தொழிலாளர்கள் ஆட்கடத்தல்காரர்கள் வசமிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

TNN 30 Jul 2017, 11:48 pm
பாங்காக்: மியான்மரின் பகோ என்ற பகுதியிலிருந்து சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்ட 55 தொழிலாளர்கள் ஆட்கடத்தல்காரர்கள் வசமிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil myanmar labours rescued in thailand
சட்டவிரோத பயணம்; மியான்மர் தொழிலாளர்கள் தாய்லாந்தில் மீட்பு...!


தாய்லாந்தில் உள்ள சமுத் சகோன் என்ற பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களைத் தாய்லாந்து பாதுகாப்புப் படையின் உதவியுடன் எயிட் அலையன்ஸ் கமிட்டி (Aid Alliance Committee) என்ற அமைப்பு மீட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அவ்வமைப்பின் பிரதிநிதி யே-மின், “அத்தொழிலாளர்கள் பகோ பகுதியில் உள்ள தனாடிபின் மற்றும் நியாங்கிளிபின் டவுன்ஷிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ஆட்கடத்தல் புரோக்கர்கள் அவர்களுக்கு வேலைச் செய்வதற்கான உரிமங்களைத் தயார் செய்து தாய்லாந்திற்கு அனுப்பியுள்ளனர்.

ஹிட்கிஹி ஊடாக ஏழுநாள் எல்லை பாஸ் மூலம் அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்கள். பின் மஹாசாய் என்ற பகுதியில் ஒரு மாதத்திற்கு மேல் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் சிலர் ஆட்கடத்தல்காரர்களிடமிருந்து தப்பி வந்ததன் மூலமாகவே இத்தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதியை அறிந்து கொள்ள முடிந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், தாய்லாந்தில் 2.6 மில்லியனுக்கு மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பெருமளவிலான தொழிலாளர்கள் தாய்லாந்தைச் சுற்றியுள்ள மியான்மர், கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட வறுமை மிகுந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

Myanmar labours rescued in Thailand.

அடுத்த செய்தி