ஆப்நகரம்

மியான்மரில் வெடித்தது வன்முறை; கலவர பூமிக்குள் அனுப்பப்பட்ட ரோஹிங்கிய அகதிகள்...!

பங்களாதேஷில் தஞ்சமடைய முயன்ற மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் மீது மியான்மர் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

TNN 28 Aug 2017, 12:35 am
மியான்மரின் ரக்ஹைன் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறைச் சூழல் காரணமாக பங்களாதேஷில் தஞ்சமடைந்த ரோஹிங்கியா அகதிகள் மீண்டும் மியான்மருக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஏற்கனவே பங்களாதேஷில் நான்கு லட்சம் ரோஹிங்கியா அகதிகள் உள்ளதால் இனி எவரையும் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என அண்மையில் பங்களாதேஷ் அரசு தெரிவித்திருந்தது.
Samayam Tamil myanmar security forces attacked rohingya refugees
மியான்மரில் வெடித்தது வன்முறை; கலவர பூமிக்குள் அனுப்பப்பட்ட ரோஹிங்கிய அகதிகள்...!


இந்த நிலையில் பங்களாதேஷ் எல்லையான கும்தம் அருகே சிறைப்படுத்தப்பட்ட 70 ரோஹிங்கியா அகதிகள் இன்று மியான்மருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

“தங்களை மியான்மர் திருப்பி அனுப்ப வேண்டாம் என அகதிகள் எங்களிடம் மன்றாடினர்” என இச்சம்பவத்தை நேரில் கண்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பங்களாதேஷ்-மியான்மர் இடையேயான எல்லையில் உள்ள நாப் ஆற்றைக் கடந்த 20 ரோஹிங்கியா அகதிகளும் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் ரோஹிங்கியா மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி