ஆப்நகரம்

விசாரணைக்கு டிமிக்கி கொடுத்த நவாஸ் ஷெரிப்

பனாமா கேட் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் விசாணைக்கு ஆஜராகவில்லை.

TNN 19 Sep 2017, 5:18 pm
பனாமா கேட் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் விசாணைக்கு ஆஜராகவில்லை.
Samayam Tamil nawaz sharif skips pakistan court hearing
விசாரணைக்கு டிமிக்கி கொடுத்த நவாஸ் ஷெரிப்



பாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரிப் இருந்த போது, அவர் மீது பனமா கேட் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. இது குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்துமாறு கடந்த மே மாதம் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம், நவாஸ் ஷெரிப்பை தகுதி நீக்கம் செய்தது. இதைத் தொடர்ந்து, அவரும் கடந்த ஜீலை மாதம் 28 ம் தேதி, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இன்று ஆஜராக வேண்டும் என்று நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகன்கள் ஹசன் நவாஸ், ஹூசைன் நவாஸ் ஆகியாருக்கு தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நவாஸ், ஆஜராகமல் தனது ஆலோசகரை அனுப்பியிருந்தார். இது குறித்து நீதிமன்றத்தில் ஆஜரான அவரது ஆலோசகர், புற்றுநோய் சிகிச்சை பெற்று வரும் தனது மனைவி குல்சூம் ஷெரிப்புக்கு துணையாக நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனில் தங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை இந்த மாதம் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அடுத்த செய்தி