ஆப்நகரம்

2 ஆண்டுகளில் 45,000 பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட்டுள்ளனர்-அமெரிக்கா

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐ.எஸ் அமைப்பின் ஆதிக்கம் நிறைந்த சிரியா,ஈராக்கில் மட்டும் சுமார் 45,000 தீவிரவாதிகளை கொன்று குவித்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

TNN 11 Aug 2016, 10:04 am
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐ.எஸ் அமைப்பின் ஆதிக்கம் நிறைந்த சிரியா,ஈராக்கில் மட்டும் சுமார் 45,000 தீவிரவாதிகளை கொன்று குவித்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Samayam Tamil nearly 45000 isis fighters killed in past 2 years
2 ஆண்டுகளில் 45,000 பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட்டுள்ளனர்-அமெரிக்கா


ஐ.எஸ் அமைப்பின் ஆதிக்கம் நிறைந்த சிரியா,ஈராக்,லிபியா போன்ற பல நாடுகளில் உள்ள அந்த அமைப்பினர் மீது அமெரிக்க கூட்டுப்படையினர் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தி வருகிறனர்.சில நாடுகளின் உள்ளூர் அரசு மற்றும் புரட்சிப்படைகளுடன் இணைந்தும் இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டு வருகிறது.இந்த தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.இந்நிலையில் முதன் முதலாக தங்களால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கையை அமெரிக்க கூட்டுப்படைகள் தற்போது அறிவித்துள்ளது.

“சிரியா,ஈராக் ஆகிய நாடுகளில் ஐ.எஸ் அமைப்பின் வசம் இருந்த 25,000 கிலோ மீட்டர் பரப்பளவு பகுதிகள் அமெரிக்கா நடத்தியுள்ள கூட்டுப்படை தாக்குதலால் மீட்கப்பட்டுள்ளன.இதில் அதிகபட்சமாக ஈராக்கிலிருந்து அதிக பகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.கடந்த இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 45,000 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.அதிகபட்சமாக கடந்த 11 மாதங்களில் மட்டும் சுமார் 11,000 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.”என அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க கூட்டுப்படையில் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

அடுத்த செய்தி