ஆப்நகரம்

அகதிகளாக தவிக்கும் 5 லட்சம் ரோஹிங்கியா மக்கள்: வேதனை தரும் தகவல் அளித்த ஐ.நா!

ரோஹிங்கிய அகதிகளின் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துள்ளதாக ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது.

TNN 22 Jun 2017, 3:53 pm
டெல்லி: ரோஹிங்கிய அகதிகளின் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துள்ளதாக ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது.
Samayam Tamil nearly a half million rohingya refugees says un report
அகதிகளாக தவிக்கும் 5 லட்சம் ரோஹிங்கியா மக்கள்: வேதனை தரும் தகவல் அளித்த ஐ.நா!


மியான்மரிலிருந்து அகதிகளாக வெளியேறியவர்களின் எண்ணிக்கை நான்கரை லட்சத்திலிருந்து சுமார் ஐந்து லட்சத்தை எட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் அறிக்கையின் படி, அகதிளாக மியான்மரிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 4,90,300 தொட்டுள்ளது. கடந்த ஆண்டின் எண்ணிக்கை 4,51,800. இதில் 2,76,200 பேர் வங்கதேசத்தில் வசிக்கின்றனர். அதற்கு அடுத்து தாய்லாந்தில் 102,600 அகதிகளும், மலேசியாவில் 87,000 அகதிகளும், இந்தியாவில் 15,600 அகதிகளும் தஞ்சமடைந்துள்ளதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி உலகெங்கும் 65.6 மில்லியன் பேர் பல்வேறு காரணங்களுக்காக கட்டாய இடப்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அகதிகள், உள்நாட்டில் இடப்பெயர்ந்தவர்கள், தஞ்சக்கோரிக்கையாளர்களை முறையாக பாதுகாக்க வேண்டியது கூட்டுப்பொறுப்பாகும்” என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் உயர் ஆணையாளர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார்.

Nearly a half-million Rohingya refugees says UN report.

அடுத்த செய்தி