கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஊரடங்கு அமலில் இருக்கும் பகுதிகளில் வேறு வழியின்றி ஊரடங்கை நீட்டிப்பது வாடிக்கையாகியுள்ளது. இந்த வரிசையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவிலும், அண்டை மாவட்டங்களிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மே 12ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நேபாளத்தில் நேற்று ஒரே நாளில் 7,660 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 55 பேர் பலியாகியுள்ளனர். நேபாளத்தில் ஒரே நாளில் இவ்வளவு பேருக்கு கொரோனா உறுதியானது இதுவே முதல்முறை.
அரசு அறிவிப்பின்படி காத்மாண்டு, லலித்பூர், பக்தாபூர் ஆகிய மாவட்டங்களில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் எமர்ஜென்சி தேவைகளுக்கு தவிர அனைத்து போக்குவரத்து சேவைகளும் இயங்காது. மார்க்கெட்டுகள் மூடப்பட்டே இருக்கும்.
நேபாளத்தில் நேற்று ஒரே நாளில் 7,660 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 55 பேர் பலியாகியுள்ளனர். நேபாளத்தில் ஒரே நாளில் இவ்வளவு பேருக்கு கொரோனா உறுதியானது இதுவே முதல்முறை.
அரசு அறிவிப்பின்படி காத்மாண்டு, லலித்பூர், பக்தாபூர் ஆகிய மாவட்டங்களில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் எமர்ஜென்சி தேவைகளுக்கு தவிர அனைத்து போக்குவரத்து சேவைகளும் இயங்காது. மார்க்கெட்டுகள் மூடப்பட்டே இருக்கும்.