ஆப்நகரம்

தாய் இறந்து பிறந்த ஆச்சரிய குழந்தை; அடுத்து நடந்த நெஞ்சை உறைய வைக்கும் சோகம்!

புதிதாக பிறந்த குழந்தை ஒன்றிற்கு, தாய் இறந்த சில தினங்களில் அதிர்ச்சிகர சம்பவம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 22 May 2019, 8:03 am
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் அக்குர்சோ. இவரது மனைவி லாரென் அக்குர்சோ. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றன. இந்நிலையில் லாரென் மீண்டும் கருவுற்றார்.
Samayam Tamil NewBorn Baby


நிறை மாத கர்ப்பிணியாக கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக சிகிச்சை பலனின்றி லாரென் உயிரிழந்துள்ளார். இது அவர்களுடைய குடும்பத்தை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

இதற்கிடையில் தாயின் வயிற்றில் குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்தது. அதை அறுவை சிக்சிசை மூலம் வெளியே எடுத்தனர். தாய் இறந்து நீண்ட நேரம் அவரின் வயிற்றில் இருந்ததால், குழந்தைக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்கவில்லை.

இதனால் பிறக்கும் போது மூளையில் காயம் இருந்துள்ளது. பின்னர் உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் உதவியுடன் குழந்தையை பராமரித்து வந்தனர். குழாய் மூலம் ஆக்சிஜன் மற்றும் உணவு செலுத்தப்பட்டு வந்தது.

இந்த குழந்தை குறித்து தகவலறிந்த அமெரிக்க மக்கள், நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 18 நாட்களைக் கடந்த நிலையில், குழந்தையின் உடல் போதிய சிகிச்சையை ஏற்றுக் கொள்ளவில்லை.

உயிர் காக்கும் கருவிகளை ஏற்க சக்தி இல்லை. இதனால் தீவிர ஆலோசனைக்கு பிறகு, உபகரணங்கள் அகற்றப்பட்டு, குழந்தை மரணத்தை தழுவியது. இதுகுறித்து பேசிய தந்தை அக்குர்சோ, எனது கைகளில் எங்கள் குழந்தை உயிரை விட்டான்.

அவனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மிக்க நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி