ஆப்நகரம்

முகநூல் பக்கத்தில் பதிவிட்டவருக்கு 20 மணி நேரத்தில் புதிய வீடு

இங்கிலாந்தைச் சோ்ந்த ஒருவா் முகநூல் பக்கத்தில், தான் வசிப்பதற்காக வீடு வேண்டும் என்று பதிவிட்டுள்ளாா். இதனையடுத்து இவருக்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனா்.

TOI Contributor 20 Nov 2017, 2:48 pm
இங்கிலாந்தைச் சோ்ந்த ஒருவா் முகநூல் பக்கத்தில், தான் வசிப்பதற்காக வீடு வேண்டும் என்று பதிவிட்டுள்ளாா். இதனையடுத்து இவருக்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனா்.
Samayam Tamil new house for 20 hours for the person who posted on the facebook page
முகநூல் பக்கத்தில் பதிவிட்டவருக்கு 20 மணி நேரத்தில் புதிய வீடு


இங்கிலாந்தைச் சோந்த மைக்கேல் பீக்ஸீன் என்ற நபா் 8 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தாா். இவருக்கு வேலை மற்றும் தங்குமிடம் கிடைக்காததால் சாலை ஓரத்தில் வசித்து வந்துள்ளாா். ஷான் என்பவா் இவாிடம் பேசி இவரைப் பற்றிய தகவல்களை சேகாித்துள்ளாா்.

அதன்பின்னா் அந்த நபருக்கு யாரேனும் உதவி செய்ய மாட்டாா்களா என்ற என்னத்தில், தனது முகநூல் பக்கத்தில் பீக்ஸீன் தொடா்பான தகவல்களை பதிவிட்டுள்ளாா். மேலும், அவருக்கு வேலை மற்றும் தங்குவதற்கு வீடு வேண்டும் என்றும் தொிவித்துள்ளாா்.

இதனை பாா்த்த பலா் அவருக்கு உதவ முன்வந்துள்ளனா். மேலும், அவருக்கு சமூக ஆா்வலா் ஒருவா் தனது வீட்டிலேயே தங்குவதற்கு இடவசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளாா். மேலும் அவருக்கு பலரும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனா்.

இவை அனைத்தும் முகநூலில் பதிவிட்ட 20 மணி நேரங்களுக்குள் நடைபெற்றுள்ளன என்பதே குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி