நியூசிலாந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாட்டு அரசு கொரோனா வைரஸ் பரவுதைத் தடுக்க கடந்த 5 வாரங்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இதனால் அந்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அனுமதிப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா அறிவித்துளார். இதுவரை அமலில் நான்காம் கட்டத்தில் இருந்த ஊரடங்கு உத்தரவை மூன்றாம் கட்டத்துக்கு மாற்றியுள்ளார்.
இந்தத் தளர்வின் மூலம் சில தொழில்கள், பார்சல் மட்டும் அளிக்கும் உணவுகங்கள் மற்றும் பள்ளிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பை படுகொலை செய்வேன் என மிரட்டியவருக்கு 18 மாதம் சிறை
"பரவலான சமூகத் தொற்று நியூசிலாந்தின் எந்தப் பகுதியிலும் ஏற்படவில்லை. நாம் இந்தப் போராட்டத்தில் வென்றுவிட்டோம்." என்றும் பிரதமர் ஜெசிந்தா பெருமிமதம் தெரிவித்தார். ஆனால், அனைத்து கட்டுப்பாடுகளும் எப்போது முழுமையாக விலக்கப்படும் என்பது பற்றி இப்போது கூற முடியாது என்றும் சொல்லியிருக்கிறார்.
"எந்தக் காரணத்தைக் கொண்டும் நியூசிலாந்து மக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் முடிவு எடுக்கப்படாது. அவசியம் ஏற்பட்டால் ஊரடங்கு உத்தரவு இதே நிலையில் தொடர வேண்டியிருக்கலாம்." எனவும் அவர் குறிப்பிட்டார்.
நியூசிலாந்தில் இதுவரை 1,122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
வுகானில் கடைசி கொரோனா நோயாளியும் டிஸ்சார்ஜ்
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அனுமதிப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா அறிவித்துளார். இதுவரை அமலில் நான்காம் கட்டத்தில் இருந்த ஊரடங்கு உத்தரவை மூன்றாம் கட்டத்துக்கு மாற்றியுள்ளார்.
இந்தத் தளர்வின் மூலம் சில தொழில்கள், பார்சல் மட்டும் அளிக்கும் உணவுகங்கள் மற்றும் பள்ளிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பை படுகொலை செய்வேன் என மிரட்டியவருக்கு 18 மாதம் சிறை
"பரவலான சமூகத் தொற்று நியூசிலாந்தின் எந்தப் பகுதியிலும் ஏற்படவில்லை. நாம் இந்தப் போராட்டத்தில் வென்றுவிட்டோம்." என்றும் பிரதமர் ஜெசிந்தா பெருமிமதம் தெரிவித்தார். ஆனால், அனைத்து கட்டுப்பாடுகளும் எப்போது முழுமையாக விலக்கப்படும் என்பது பற்றி இப்போது கூற முடியாது என்றும் சொல்லியிருக்கிறார்.
"எந்தக் காரணத்தைக் கொண்டும் நியூசிலாந்து மக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் முடிவு எடுக்கப்படாது. அவசியம் ஏற்பட்டால் ஊரடங்கு உத்தரவு இதே நிலையில் தொடர வேண்டியிருக்கலாம்." எனவும் அவர் குறிப்பிட்டார்.
நியூசிலாந்தில் இதுவரை 1,122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
வுகானில் கடைசி கொரோனா நோயாளியும் டிஸ்சார்ஜ்