ஆப்நகரம்

ஆமா கஞ்சா அடிச்சிருக்கேன் - பிரதமர் கொடுத்த ஷாக்!

முன்னொரு காலத்தில் கஞ்சா பயன்படுத்தியதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 30 Sep 2020, 7:40 pm

நியூசிலாந்தில் வரும் அக்டோபர் 17ஆம் தேதியன்று பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் தற்போதைய பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கன்சர்வேடிச் நேஷனல் கட்சி வேட்பாளர் ஜுடித் கோலின்ஸ் போட்டியிடுகிறார்.
Samayam Tamil Jacinda Ardern [Credits: AP]


இந்நிலையில், இரு வேட்பாளர்களுக்கும் இடையே இன்று நேரடி விவாதம் நடைபெற்றது. அப்போது, பிரதமர் ஜெசிண்டா கஞ்சா பயன்படுத்தியிருக்கிறாரா என்று நெறியாளர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜெசிண்டா, “ஆமாம். நீண்ட காலத்திற்கு முன் பயன்படுத்தி இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

எய்ட்ஸ் குணமடைந்த முதல் நபர் கேன்சரால் மரணம்!

ஜெசிண்டா ஆர்டர்ன் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. மேலும், மக்களிடமும் ஹெசிண்டாவுக்கு வெகுவான ஆதரவு இருக்கிறது. பொதுத்தேர்தலுடன் சேர்த்து கஞ்சா பயன்பாடு மற்றும் கருணைக் கொலைகளை சட்டப்பூர்வமாக்குவது குறித்து பொது வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது.

இந்த இரண்டு விவகாரங்களும் தற்போதைய பொதுத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், முன்பு கஞ்சா பயன்படுத்தியிருப்பதாக பிரதமரே கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்குவது குறித்து நியூசிலாந்து மக்கள்தான் முடிவு செய்ய வேண்டுமென ஜெசிண்டா தெளிவுபடுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி