ஆப்நகரம்

திருமணம் எப்போது? மனம் திறந்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன்!

நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன் தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்

Samayam Tamil 15 Nov 2020, 6:09 pm
நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சி இரண்டாவது முறையாக நடைபெற்று வருகிறது. இவரது தொழிலாளர் கட்சி கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக ஜெசிண்டா அர்டர்ன் பதவியேற்றுள்ளார்.
Samayam Tamil காதலர், குழந்தையுடன் ஜெசிண்டா அர்டர்ன்
காதலர், குழந்தையுடன் ஜெசிண்டா அர்டர்ன்


நியூசிலாந்து நாட்டின் மக்கள் விரும்பும் பிரதமராக இருக்கும் ஜெசிண்டா அர்டர்னுக்கு தற்போது 40 வயதாகிறது. தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் கிளார்க் கேஃபோர்ட்டை நீண்ட காலமாக இவர் காதலித்து வருகிறார். திருமணத்துக்‍கு முன்பே இணைந்து வாழும் இவர்களுக்‍கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதற்கு முன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மறைந்த பெனாசீர் பூட்டோ பதவியிலிருந்த போது, குழந்தைப் பெற்ற நிலையில், பிரதமர் பதவியில் உள்ள போது, குழந்தை பெற்ற உலகின் இரண்டாவது பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஆவார்.

ஜெசிண்டா அர்டர்ன், கிளார்க் கேஃபோர்ட் ஆகியோரின் திருமணம் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடைபெற்றது. ஈஸ்டர் விடுமுறையையொட்டி, திருமண நிச்சயத்திற்கான மோதிரம் மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளதாக ஜெசிண்டா அர்டர்னின் செய்தித் தொடர்பாளர் அப்போது அந்த தகவலை உறுதிபடுத்தினார்.

தீபாவளி: சர்ப்ரைஸ் கொடுத்த அமெரிக்க தலைவர்கள்!

இதையடுத்து, இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என்பது குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்த நிலையில், தமது திருமண நாள் இன்னும் நிச்சயிக்‍கப்படவில்லை என்று நியூ ப்ளைமெளத் நகரில் செய்தியாளர்களின் கேள்விக்‍குப் பதில் அளித்த ஜெசிண்டா அர்டர்ன் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கான திட்டங்கள் உள்ளன, ஆனால் தேதி குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த ஜெசிண்டா அர்டர்ன், எங்களிடம் சில திட்டங்கள் உள்ளன - அவை ஏதோவொரு வழியில் உள்ளன என்றும், இன்னும் சில திட்டங்களை எங்களது குடும்பத்தினருடனுன், நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெள்ளை மேலாதிக்கவாதி ஒருவரால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டது மற்றும் கொரோனா பாதிப்பில் இருந்து நாட்டை மீட்டெடுத்தது உள்ளிட்டவைகளில் தனது தீர்க்கமான முடிவுக்காக உலகளாவிய பாராட்டை ஜெசிண்டா அர்டர்ன் பெற்றார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி