அமெரிக்காவில் சான் டியாகோ உயிரியல் பூங்காவில் உள்ள குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவியதாக சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியாகியது. இந்நிலையில், பூங்காவை சேர்ந்த ஒன்பது குரங்குகளுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
நான்கு ஒராங்குட்டான் மற்றும் ஐந்து போனபோஸ் வகை குரங்குகளுக்கு பரிசோதனை நிலை தடுப்பூசிகள் போடப்பட்டன. ஒவ்வொரு குரங்குக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூடிஸ் என்ற கால்நடை மருத்துவ நிறுவனம் சார்பில் குரங்குகளுக்காக பிரத்யேகமாக கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் இந்த உயிரியல் பூங்காவை சேர்ந்த எட்டு குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருப்பது கண்டறியப்பட்டது.
குரங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது அறிவியலுக்கு கிடைத்த வெற்றி என சான் டியாகோ உயிரியல் பூங்கா நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
நேற்று தடுப்பூசி போடப்பட்ட குரங்குகளில் ஒரு ஒராங்குட்டான் குரங்கு 1994ஆம் ஆண்டிலேயே மருத்துவ சாதனை ஒன்றையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, இக்குரங்குக்கு 1994ஆம் ஆண்டில் உலகிலேயே முதல்முறையாக இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
நான்கு ஒராங்குட்டான் மற்றும் ஐந்து போனபோஸ் வகை குரங்குகளுக்கு பரிசோதனை நிலை தடுப்பூசிகள் போடப்பட்டன. ஒவ்வொரு குரங்குக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூடிஸ் என்ற கால்நடை மருத்துவ நிறுவனம் சார்பில் குரங்குகளுக்காக பிரத்யேகமாக கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் இந்த உயிரியல் பூங்காவை சேர்ந்த எட்டு குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருப்பது கண்டறியப்பட்டது.
குரங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது அறிவியலுக்கு கிடைத்த வெற்றி என சான் டியாகோ உயிரியல் பூங்கா நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
நேற்று தடுப்பூசி போடப்பட்ட குரங்குகளில் ஒரு ஒராங்குட்டான் குரங்கு 1994ஆம் ஆண்டிலேயே மருத்துவ சாதனை ஒன்றையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, இக்குரங்குக்கு 1994ஆம் ஆண்டில் உலகிலேயே முதல்முறையாக இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.