ஆப்நகரம்

அமெரிக்காவிலும் நண்பரின் வாழ்க்கையைச் சீரழித்த நிரவ் மோடி

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அல்போன்ஸ் தன் காதலியிடம் அதனை விளக்க முயன்றபோது, அவர் அல்போன்ஸ்தான் தன்னை ஏமாற்றிவிட்டார் என நினைத்து அவரைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

Samayam Tamil 9 Oct 2018, 4:30 am
இந்தியாவில் பல கோடி வங்கிக்கடன் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, அமெரிக்காவிலும் தன் வாடிக்கையாளர் ஒருவரை நன்றாக ஏமாற்றியுள்ளார்.
Samayam Tamil _100099305_gettyimages-918894668


கனடாவைச் சேர்ந்த பால் அல்போன்ஸோ என்பவர் நிரவ் மோடியுடன் பழகி நண்பராகியுள்ளார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் நிரவ் மோடிக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தன் நிச்சயதார்த்திற்காக இரண்டு ஓவல் வடிவ வைர மோதிரங்களை பிரத்யேகமாக செய்துதரக் கேட்டுள்ளார். நிரவ் மோடியும் அதன்படி மோதிரங்களை அனுப்பியுள்ளார்.

ஒரு மோதிரம் இந்திய மதிப்பில் சுமார் 7.20 கோடி ரூபாய்க்கு மேல். விலை உயர்ந்த மோதிரம் என்பதால் அதற்கு காப்பீடு செய்ய விரும்பிய அல்போன்ஸோ நிரவ் மோடியிடம் வைரத்தின் தரச்சான்றுகளைக் கேட்டிருக்கிறார். அதனை ஏற்ற நிரவ் மோடி சில நாட்களில் சான்றுகளை அனுப்பிவிட்டதாகக் மெயில் அனுப்பியிருக்கிறார்.

அதற்குள் அல்போன்ஸோவின் காதலி வைரத்தைக் காப்பீடு செய்ய இருந்த நிறுவனத்திற்கு மோதிரங்களை கொண்டு சென்றிருக்கிறார். அங்கே மோதிரங்களை சோதனை செய்தபோது அவை வெறும் ஒளிரும் கற்கள்தான் எனவும் வைரம் அல்ல எனவும் தெரிந்திருக்கிறது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அல்போன்ஸோ தன் காதலியிடம் அதனை விளக்க முயன்றபோது, அவர் அல்போன்ஸோதான் தன்னை ஏமாற்றிவிட்டார் என நினைத்து அவரைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மனம் நொந்த அல்போன்ஸோ நிரவ் மோடியை பழித்து மற்றொரு மெயில் அனுப்பியுள்ளார். அதற்கு பதில் ஏதும் வரவில்லை.

இந்நிலையில், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நிரவ் மோடிக்கு மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் அல்போன்ஸோ. அதில் 4.2 மில்லியன் டாலர் இழப்பீடாக வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரியில் விசாரணைக்கு வருகிறது.

அடுத்த செய்தி