ஆப்நகரம்

5 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேர்: இந்துக்களுக்கான தனி நாடு... நித்யானந்தாவின் பிளான்கள்!

ஒரு லட்சம் பேரை கைலாசாவுக்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Dec 2020, 9:20 pm
சர்ச்சைக்கு பேர்போன சாமியாரான நித்யானந்தா தனது கைலாசா நாட்டை விளம்பரப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். கைலாசாவுக்கு மூன்று நாட்கள் விசா வழங்குவதாக அண்மையில் அவர் அறிவித்திருந்தார்.
Samayam Tamil நித்யானந்தா


இந்நிலையில், இந்து மதம் உயிரோடு இருப்பதற்கு கைலாசா தேவை என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோவில், “யூதர்கள் தங்கள் மதத்தை பாதுகாப்பதற்காக தனி நாட்டை உருவாக்கிக்கொண்டனர். அதேபோல, எதிர்காலத்தில் இந்து மதத்தை பாதுகாக்க இந்துக்களுக்கு கைலாசா வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போட்டா முதலையா மாறிடுவோம்: அதிபர் வெளியிட்ட பகீர் தகவல்!

இந்து மதத்துக்கான விதை வங்கிதான் கைலாசா. இந்து மதத்தை உயிரோடு பாதுகாக்க நமக்கு ஒரு விதை வங்கி வேண்டும். வேதங்களையும், ஆகமங்களையும் அவமதிப்பது நிந்தனை என கருதும் ஒரு நாடு நமக்கு தேவை. அதன்பிறகு, வேதங்களையும், ஆகமங்களையும் அவமதிப்பது சட்டப்படி நிந்தனை என பன்னாட்டு நிறுவனங்களுடனும், ஃபேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக வலைதள நிறுவனங்களுடனும், மற்ற நிறுவனங்களுடனும் பேச முடியும்.

இந்து மத வேதங்கள் புனிதமானவை. அவற்றை அவமதிப்பது, அவதூறு செய்வது தவறு. இந்து மதம் ஏறக்குறைய ஐசியூவில் இருக்கிறது. அதற்கு உயிர் கொடுத்து நாம் காப்பாற்ற வேண்டும். உடனே எல்லா இந்துக்களும் கைலாசாவுக்கு வந்துவிடுங்கள் என்று நான் கூறவில்லை. நீங்கள் எங்கே இருந்தாலும், கைலாசா விரைவாக உருவாவதற்கு ஆதரவளித்தால் போதும்” என்று தெரிவித்துள்ளார்.

51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா; இந்தியன் பனோரமாவில் 'அசுரன்', 'தேன்' தேர்வு!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது ஒரு லட்சம் பேரை கைலாசாவில் செட்டில் ஆக வைக்க திட்டமிட்டு வருவதாக நிதியானந்தா தெரிவித்திருந்தார். மேலும், கைலாசாவுக்கு வர விரும்புவோருக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து தனி விமானங்கள் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி