ஆப்நகரம்

நான் இறந்த பிறகு எல்லாமும் இந்தியாவுக்கே : கைலாசா நித்தி அறிவிப்பு

இறப்புக்குப் பிறகு நிச்சயம் உடல் இந்தியாவுக்கு வரும். ஆனால், அதுவரையில் என்னைக் கைது செய்ய முடியாது என்று நக்கலடிக்கிறாரா நித்தி என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

Samayam Tamil 22 Aug 2020, 1:56 pm
இணைய வழியாக பேசலாம், பழகலாம் என்பதைத் தாண்டி தொழிலே செய்யலாம் என்று நிரூபித்து வருகிறது வருகிறது இன்றைய இணைய வழி வர்த்தக உலகம். ஆனால், இவை எல்லாவற்றையும் அள்ளி விழுங்கும் அளவுக்கு ஒரு காரியம் செய்திருக்கிறார் சாமியார் என்று அழைக்கப்படும் சர்வதேசக் குற்றவாளி.
Samayam Tamil nithyananadha


இணையத்தில் விழா நடத்தலாம். வியாபாரம் நடத்தலாம். ஆனால், ஒரு நாடே நடத்தி வருகிறார் நித்தியானந்தா. சர்வதேசக் காவல்துறையால் தேடப்பட்டு வரும் இவர், காவல்துறையிடம் அகப்படாமல் எங்கோ இருந்தபடி அனுதினமும் வீடியோ மட்டும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அந்தவகையில், தனது இ-நாடான (இ-மெயில், இ-பாஸ், இ-டிக்கெட் போல) கைலாசாவுக்கான நாணயத்தை இன்று வெளியிட்டார் நித்தியானந்தா.

வெளியிட்ட பிறகு பேசிய நித்தியானந்தா, “நான் இந்து மதத்துக்கும் இந்தியாவுக்கும் சேவை செய்ய விரும்பினேன். என்னை இந்தியாவில் தங்க விட்டிருந்தால் நிம்மதியாக தொண்டு செய்தபடி அமைதியாக வாழ்ந்திருப்பேன். ஆனால், அது நடக்கவில்லை.

இந்த உடலில் என் உயிருள்ளவரை நான் இந்துசமயத்துக்கு பணியாற்றுவேன். இந்த உடலை விட்டு என் உயிர் போன பிறகு என்னைச் சுற்றியுள்ள அனைத்துமே இந்தியாவுக்குத்தான் சொந்தம். என் உடலும் இந்தியாவுக்கே சொந்தம்” என்று பேசினார்.

kailaasa: சொன்னது போல நாணயம் வெளியிட்ட நித்தி... ஆனால் சின்ன குழப்பம்

‘சுற்றியுள்ள’ என்று மட்டுமே பூடகமாக சொன்ன நித்யானந்தா எதைக் குறிப்பிட்டார் என்பதை கணிக்க முடியவில்லை. சொத்துக்களா, தன் வங்கிக்கணக்கு விபரமா அல்லது தன் உடலா (பாகங்களை தான செய்யப் போகிறாரா) என யூகிக்க முடியாத அளவுக்கு போகிற போக்கில் பேசியிருக்கிறார். மக்களும் இதைப் பெரிதாகக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.



எனினும் ஒன்று நிச்சயம். நித்யானந்தா இறப்புக்குப் பிறகு நிச்சயம் உடல் இந்தியாவுக்கு வரும். ஆனால், அதுவரையில் என்னைக் கைது செய்ய முடியாது என்று நக்கலடிக்கிறாரா நித்தி என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. அத்துடன், நித்தியானந்தா விவகாரம் ஏன் மந்தகதியில் நகர்கிறது என்ற கேள்வியை நீதிமன்றமே எழுப்பும் வரை

அடுத்த செய்தி