ஆப்நகரம்

பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: அட நம்ம நாட்டு பிரதமர் இல்ல!

அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. எத்தியோபியா நாட்டு பிரதமர், அண்டை நாட்டுடன் நிலவி வந்த எல்லை பிரச்சனையை பேசி தீர்த்தற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய பிரதமர் இந்திய-சீன முறைசாரா மாநாட்டில் எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Samayam Tamil 11 Oct 2019, 3:27 pm
உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு, இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil Capture


அந்த வகையில், 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மருத்துவம், வேதியியல், இயற்பியல், இலக்கியம் உள்ளிட்ட துறைக்களுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு, இயற்பியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, வேதியியல், உள்ளிட்ட துறைகளில் தனித்தன்மை கொண்டுள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அண்டை நாடான எரித்திரியா உடனான பிரச்சனையைப் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்த்தவர், எதியோப்பிய பிரதமர் அபய் அகமது அலி. அகமது அலியின் இந்த நடவடிக்கை இருநாடுகளிடையே அமைதியை ஏற்படுத்தியது.
இதை மேற்கோளிட்டு அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிப்பு.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலி பெற இருக்கிறார்.

எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலி அண்டை நாட்டுடனான எல்லை பிரச்சனையைப் பேச்சுவார்த்தையின் மூலம் பேசி தீர்த்ததுக்காக வழங்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், இந்திய சீன தலைவர்கள் பங்கேற்கும் 2வது முறைசாரா மாநாடு மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய-சீனா இடையே நிலவும் எல்லை பிரச்சனையை மோடி பேசி தீர்ப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அடுத்த செய்தி