ஆப்நகரம்

70 ஆண்டுகளுக்குப் பின் இலக்கியம் இல்லாத நோபல் சீசன்!

இலக்கியத்துக்கான நோபல் பரிசு தவிர்க்கப்பட்ட நிலையில் நோபல் பரிசு அறிவிப்பு இன்று தொடங்குகிறது.

Samayam Tamil 1 Oct 2018, 2:59 pm
கடந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு தவிர்க்கப்பட்ட நிலையில் நோபல் பரிசு அறிவிப்பு இன்று தொடங்குகிறது.
Samayam Tamil NOBELPRIZE


உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதாக பெயர் பெற்றுள்ள நோபல் பரிசு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆல்பிரட் நோபெல் என்ற வேதியியல் அறிஞரால் 1895ஆம் ஆண்டு முதல் இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

சுவீடன் அக்காதமி, ரோயல் சுவீடிய அறிவியல் கழகம், கரொலீன்ஸ்கா கல்விநிலையம், நோர்வே நோபல் குழு ஆகியவை இணைந்து இந்தப் பரிசை அறிவிக்கின்றன.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு இன்று முதல் தொடங்குகிறது. முதலாவதாக மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெறுபவரின் பெயர் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்திய நேரப்படி 3 மணிக்கு இந்த பரிசு அறிவிப்பு வெளியாகிறது.

கடந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. ஸ்வீடிஷ் அகாடமியின் தேர்வுக்குழு உறுப்பினர் காத்தீரனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் மீது பாலியல் புகார் எழுந்ததால், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படாது என கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியானது.

முன்னதாக, 1949ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி