உலக நாடுகளின் ஒருமித்த எதிர்ப்புக்கு மத்தியிலும் வடகொரியா ஆறாவது முறையாக அணுஆயுத சோதனை நடத்தியுள்ளது.
வடகொரிய அரசு தொடர்ந்து கண்டம்விட்டு கண்டம் பாய்த்து தாக்கும் ஏவுகணைகளை பரிசோதித்து உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அண்மையில் 5 முறை இந்த பயங்கர அணுஆயுத சோதனைகளை நடத்திய வடகொரியா இன்று ஆறாவது முறையாக பேரழிவை ஏற்படுத்தும் வெடிகுண்டு சோதனையை நடத்தியிருக்கிறது.
வடகொரியா மீது ஐ.நா. சபை புதிய பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால், வெறுப்பின் உச்சியில் இருக்கும் வடகொரியாவுக்கு பொருளாதார தடை எங்கள் இறையாண்மைக்கு எதிரானது என்றும் இதற்குப் பின்னால் இருக்கும் அமெரிக்கா இதற்காக உரிய விலை கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளது.
இந்நிலையில், வடகொரியாவின் சுங்ஜிபேகாம் பகுதியில் இன்று பகல் 12.36 மணி அளவில் சக்திவாய்ந்த வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக அப்பகுதியில் 6.3 ரிக்டர் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
100 டன் எடை கொண்ட இந்த வெடிகுண்டு 1945ஆம் ஆண்டு ஜப்பானின் நாகசாகியில் போடப்பட்ட வெடிகுண்டை விட ஐந்து மடங்கு சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரிய அரசு தொடர்ந்து கண்டம்விட்டு கண்டம் பாய்த்து தாக்கும் ஏவுகணைகளை பரிசோதித்து உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அண்மையில் 5 முறை இந்த பயங்கர அணுஆயுத சோதனைகளை நடத்திய வடகொரியா இன்று ஆறாவது முறையாக பேரழிவை ஏற்படுத்தும் வெடிகுண்டு சோதனையை நடத்தியிருக்கிறது.
வடகொரியா மீது ஐ.நா. சபை புதிய பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால், வெறுப்பின் உச்சியில் இருக்கும் வடகொரியாவுக்கு பொருளாதார தடை எங்கள் இறையாண்மைக்கு எதிரானது என்றும் இதற்குப் பின்னால் இருக்கும் அமெரிக்கா இதற்காக உரிய விலை கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளது.
இந்நிலையில், வடகொரியாவின் சுங்ஜிபேகாம் பகுதியில் இன்று பகல் 12.36 மணி அளவில் சக்திவாய்ந்த வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக அப்பகுதியில் 6.3 ரிக்டர் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
100 டன் எடை கொண்ட இந்த வெடிகுண்டு 1945ஆம் ஆண்டு ஜப்பானின் நாகசாகியில் போடப்பட்ட வெடிகுண்டை விட ஐந்து மடங்கு சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.